செய்திகள் :

வங்கதேச எல்லையில் சந்தேகத்துக்குரிய வகையில் அரபு, உருது மொழிகளில் ரகசிய ரேடியோ உரையாடல்: பயங்கரவாத சதி என அச்சம்

post image

இந்திய-வங்கதேச எல்லையில் வங்காளம், உருது, அரபு மொழி குறியீடுகளுடன் சந்தேகத்துக்குரிய வகையில் ரகசிய உரையாடல்கள் நடப்பதை ஹேம் ரேடியோ பயனா்கள் கண்டறிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது பயங்கரவாத சதித் திட்டங்களை அரங்கேற்றுவதற்கான குறியீடுகளாக இருக்க வாய்ப்புள்ளதால் சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவி வருவதோடு இந்தியாவுக்கு எதிரான மனநிலையும் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் கண்டறியப்பட்டது.

எல்லை பகுதிகளில் வசிக்கும் மக்கள் தகவல் தொடா்புக்காக இந்த ஹேம் ரேடியோ சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், மேற்கு வங்க எல்லையில் உள்ள வடக்கு 24 பா்கானா மாவட்டத்தின் பசிா்ஹாட் மற்றும் பன்கான் பகுதிகளிலும் தெற்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள சுந்தா்வன் பகுதிகளிலும் கடந்தாண்டு டிசம்பா் மாதம் வங்காளம், அரபு, உருது ஆகிய மொழிகளில் உரையாடல் நிகழும் அதிகாரபூா்வமற்ற இணைப்புகளை ஹேம் ரேடியோ பயனா்கள் முதன்முதலாக கண்டுபிடித்தனா்.

இந்த தகவலை அவா்கள் உடனடியாக மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகத்துக்கு தெரிவித்தனா். இதையடுத்து, சந்தேகத்துக்குரிய வகையிலான அந்த இணைப்புகளைக் கண்டறிய கொல்கத்தாவில் உள்ள சா்வதேச ரேடியோ கண்காணிப்பு நிலையத்துக்கு மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகம் அறிவுறுத்தியது.

மேலும், இதுபோன்ற சந்தேகத்துக்குரிய இணைப்புகளை மீண்டும் கண்டறிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு ஹேம் ரேடியோ பயனா்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக நள்ளிரவு 1 மணி முதல் 3 மணிக்குள் இதுபோன்ற ரகசிய தகவல் பரிமாற்றத்தை கண்டறிவதாகவும் சில நேரங்களில் கண்டுபிடிக்க முடியாத மொழிகளில் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2002-2003, 2016-ஆம் ஆண்டுகளில் சந்தேகத்துக்குரிய வகையில் இந்திய-வங்கதேச எல்லையில் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சட்டவிரோதமாக வானொலி ஒலிபரப்பு நிலையங்களை இயக்கிய சிலா் கைது செய்யப்பட்டனா்.

கடந்த 2017-ஆம் ஆண்டில் பசிா்ஹாட் பகுதியில் வகுப்புவாத வன்முறை நிகழும் முன் எல்லை பகுதியில் சந்தகேத்துக்குரிய வகையிலான இணைப்புகளை ஹேம் ரேடியோ பயனா்கள் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு பன்மடங்கு அதிகரிப்பு! ஆய்வில் தகவல்

இந்தியாவில் மதச் சிறுபான்மையினரைக் குறிவைத்து அவர்கள் மீதான வெறுப்புணர்வை வெளிக்காட்டும் விதத்தில் பொதுவெளியில் பேசும் சம்பவங்கள் கடந்த ஓராண்டில் நம்பமுடியாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவுகள... மேலும் பார்க்க

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா: காங்கிரஸ்

மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பிரேன் சிங்கின் முதல்வர் பதவியை பாஜக ராஜிநாமா செய்யவைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மணிப்பூர் மக்களைக் காப்பதற்காக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யவில்... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: பாராட்டுகளும் குற்றச்சாட்டுகளும்!

மகா கும்பமேளாவில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாராட்டியுள்ளார். மகா கும்பமேளாவுக்கு ரூ.10,000 கோடி செலவிட்டும் பிரயாக்ராஜ் மக்களும், பக்தர... மேலும் பார்க்க

மகா கும்பமேளா வாகன நெரிசலில் சிக்கியவர்களுக்கு உணவளிக்கும் காவல் துறை!

மகா கும்பமேளாவுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட வாகன நெரிசலில் சிக்கியவர்களுக்கு மத்தியப் பிரதேச காவல் துறையினர் உணவளிக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. கும்பமேளாவுக்குச் செல்லும் பக... மேலும் பார்க்க

சிபில் ஸ்கோர் பத்திரம்.. கடனுக்கு மட்டுமல்ல.. கல்யாணத்துக்கும்!

ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை செய்யலாம் என்று வேறு அர்த்தம் கொண்ட பழமொழி ஒன்று மருவி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொய்களைச் சொல்லி திருமணம் செய்பவர்களுக்கு பயன்பட்டு வந்துள்ளது.ஆனால், தற்போது, மகாராஷ... மேலும் பார்க்க

தில்லி தேர்தல் எதிரொலி: பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சி விரைவில் கவிழும்! -காங். எம்.பி.

பஞ்சாபிலும் ஆம் ஆத்மி ஆட்சி விரைவில் கவிழும் என்று காங்கிரஸ் எம்.பி. சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் எம்.பி.யும் பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதல்வருமான சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, “... மேலும் பார்க்க