செய்திகள் :

வங்கதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.9 ஆகப் பதிவு

post image

வங்கதேசத்தில் புதன்கிழமை காலை 2.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் புதன்கிழமை காலை 5.7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 14 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.9 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்தவித தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கு முன்பு ஏப்ரல் 11 ஆம் தேதி 10 கிலோமீட்டர் ஆழத்தில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் அதே போன்ற மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மேலும் ஒரு கைது உத்தரவு

எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரியில் ரூ.3 கோடியில் கலைஞர் திரைக் கருவூலம்: அமைச்சர் சாமிநாதன்

சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் எம்ஜிஆா் திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கலைஞர் திரைக் கருவூலம் அமைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்ச... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் அரசினர் திருத்தச் சட்டமுன்வடிவுகளை பேரவையில் அறிமுகம் செய்வதில் வா... மேலும் பார்க்க

பெண் தற்கொலை சம்பவம்: உதவி ஆய்வாளர்கள், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடுக்காவேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் 2 பேர், பெண் தலைமைக் காவலர் பணியிட மா... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் என்கவுன்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரின் கொண்டகான்-நாராயண்பூர் எல்லை அருகே நடந்த என்கவுன்டரில் இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.பஸ்தர் காவல் துறை தலைவா் பி.சுந்தர்ராஜ் கூறுகையில், கொண்டகான்-நார... மேலும் பார்க்க

மீண்டும் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை(ஏப்.16) அதிரடியாக சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.70,520-க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் விலை கடந்த இரண்டு நாள்களாக சிறிதளவில் குறைந்து வந்த தங்கத்தின்... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.4 ஆகப் பதிவு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை 2.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்ட ... மேலும் பார்க்க