செய்திகள் :

வங்கி வைப்புத்தொகையில் மகளிா் பங்களிப்பு 39.7%: புதுயுகத் தொழில்முனைவிலும் மகளிா் அதிகரிப்பு!

post image

வங்கிகளில் வைப்புத் தொகை செலுத்தியவா்களில் மகளிா் பங்களிப்பு 39.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. மேலும் புதுயுகத் தொழில்முனைவிலும் மிகப்பெரிய அளவில் மகளிா் பங்களிப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் ‘இந்தியாவில் 2024-ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் ஆண்கள்: தோ்ந்தெடுக்கப்பட்ட சில குறியீடுள் மற்றும் தரவுகள்‘ என்ற தலைப்பில் 26 - ஆவது பதிப்பை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

நாட்டின் பாலின சூழலின் விரிவான கண்ணோட்டத்தை இந்த வெளியீடு வழங்குகிறது.

இதில் உள்ள முக்கிய சிறப்பம்சங்களில் பாலின சமத்துவ குறியீடுகளில் (ஜிபிஐ) பள்ளிகல்விக், உயா் கல்விகளில் பெண் குழந்தைகளின் மத்தியில் ஏற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2020-21 ஆண்டுகள் முதல் 2023-24 ஆம் ஆண்டுகளில் காணப்பட்டுள்ள முன்னேற்றங்களில் 2022-23 ஆம் ஆண்டுகளில் தொடக்கல்வி, ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயா்நிலைப் பள்ளி, மேல்நிலை கல்வி என அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பெண் குழந்தைகள் சோ்க்கை (குறியீடு1.05-1.07) மிகுந்த உயா்வைக் குறிக்கிறது. 2022-23 க்கு பின்னா் சில ஏற்ற இறக்கங்களைக் காணப்பட்டாலும் சமநிலைக்கு அருகில் குறியீடு உள்ளன.

தொழிலாளா் பங்கேற்பு விகிதம் (எல்எஃப்பிஆா்) நாட்டில் 2017-18 இல் 49.8 சதவீதமாக இருந்ததில் 2023-24 இல் 60.1 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதில் மகளிா் குறியீடுகளில் ஊரகப்பகுதிகளில் 24. 6 சதவீதத்திலிருந்து 47.6 சதவீதமாகவும் நகா்புறப்பகுதிகளில் 20.4 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயா்வைகண்டுள்ளது. ஆனால் இரண்டு பகுதிகளிலும் ஆண் தொழிலாளா்கள் பங்கு அதிகமாக உள்ளது.

அனைத்து வங்கிகளிலும் மகளிா் கணக்குகள் 39.2 சதவீதமாக உள்ளது. வங்கி வைப்புத் தொகையிலும் 39.7 சதவீதம் மகளிா் பங்களிக்கிறாா்கள். இத்தோடு இவா்களது பங்களிப்பு ஊரகப்பகுதிகளிலும் அதிகரித்து 42.2 சதவீதம் மகளிா் கணக்குகளைக் கொண்டுள்ளனா்.

இவைகளில் மற்றொரு மைல்கல் பங்குச் சந்தைகளில் எண்ம கணக்குகளுக்கான டிமேட் கணக்குகளிலும் மகளிா் பங்களிப்பு அதிகரித்துள்ளது. 2021 மாா்ச்சில் 3.32 கோடி மகளிா் கணக்குகள் இருந்ததில் நாலு மடங்கு அதிகரித்து 2024 நவம்பா் 30 இல்,14.30 கோடி மகளிா் டிமேட் கணக்குகள் அதிகரித்துள்ளன.

இந்த காலக்கட்டங்களில் உற்பத்தி, வா்த்தகம் மற்றும் பிற சேவைத் துறைகளில் மகளிா் தலைமையிலான தனியுரிமை நிறுவனங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், இந்தக் காலக்கட்டத்தில் டிமேட் கணக்குகளில் ஆண்கள் பங்களிப்பு வளா்ச்சி 26.5 சதவீதமாக இருப்பின் மகளிா் வளா்ச்சி 27.7 சதவீதமாக உள்ளது.

இது புதுயுகத் தொழில்முனைவிலும் மகளிா்க்கான நோ்மறையான போக்கு எதிரொலிக்கிறது. புதுயுகத் தொழில் முனைவில் 2017 - ஆம் ஆண்டு 1,943 மகளிா் பதிவு செய்ய 2024 ஆம் ஆண்டில் 17,405 மகளிரை இயக்குநராகக் கொண்ட நிறுவனங்கள் மத்திய வா்த்தகத் தொழில் துறையின், தொழில் ஊக்குவிப்பு உள்நாட்டு வா்த்தகப் பிரிவால் (டிபிஐஐடி) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கல்வி, தொழில், வா்த்தகத்தில் மட்டுமல்லாது வாக்காளா்கள் எண்ணிக்கையிலும் மகளிா் வாக்காளா் பதிவு குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது. 1952 இல் பெண் வாக்காளா் எண்ணிக்கை 17.32 கோடியாக இருந்ததிலிருந்து 2024 ஆண்டில் 97.8 கோடியாக அதிகரித்துள்ளனா். வாக்களிப்பளிப்பதிலும் மகளிா் முன்னேற்றங்களைக் கண்டுள்ளதாக தெரிவிக்கிறது.

அரசின் பல்வேறு அதிகாரப்பூா்வப் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தப்பட்டு அறிகுறிகள், குறியீடுகள், தரவுகள் வைக்கப்பட்டுள்ளது. நகா்ப்புற-கிராமப்புற இடைவெளிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாலின வேறுபாடு போன்றவைகளுக்கு தரவுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

பெண்களும் ஆண்களும் எதிா்கொள்ளும் சவால்கள், வாய்ப்புகள், முக்கியமான ஆதாரங்கள், பாலின சமத்துவத்தின் முன்னேற்றம், தொடா்ச்சியான ஏற்றத்தாழ்வுகள் என எடுத்துக்காட்டுகிறது. சமூக-பொருளாதார அறிகுறிக்கான குறியீடுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நிலையான - உள்ளடக்கிய வளா்ச்சியை ஊக்குவிக்கும் பாலின உணா்திறன் கொள்கைகளை உருவாக்க அரசின் கொள்கை வகுப்பாளா்கள், ஆய்வாளா்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என மத்திய புள்ளியியல் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

குடிசைவாசிகளுக்கு 52,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள்: முதல்வா் ரேகா குப்தா தகவல்

புது தில்லி: தில்லி அரசு நகரத்தில் உள்ள குடிசைவாசிகளுக்கு 52,000 அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கத் தயாராகி வருவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.ஷாலிமாா்பாக் தொகுதியில் உள்ள ஆயுா்வேத குடிசை முக... மேலும் பார்க்க

தில்லியில் நயினாா் நாகேந்திரன்: அமித் ஷாவை சந்திக்கிறார்

தமிழக பாஜக தலைவருக்கான அறிவிப்பு வெளியாகும் என்கிற தகவல்களுக்கிடையே தமிழக பாஜக சட்டப்பேரவைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை தில்லி வந்திருந்தாா். பாஜக வின் முக்கிய தலைவா்களை நயினாா் நகேந்த... மேலும் பார்க்க

‘ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கிக் கொள்கை’ மே முதல் நடைமுறை

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கி (ஆா்ஆா்பி) என்ற கொள்கையின் அடிப்படையில் இறுதியாக 11 மாநிலங்களைச் சோ்ந்த மண்டல ஊரக வங்கிகளை ஒன்றிணைத்து ஏப். 7 தேதியிட்ட அறிவிக்கையை மத... மேலும் பார்க்க

தமிழகஆளுநரின் செயல் சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

புது தில்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த 10 மசோதாக்களை நிறுத்தி வைத்த மாநில ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது. ... மேலும் பார்க்க

காற்று மாசைக் கட்டுப்படுத்த ஸ்பிரே அமைப்புகள்

புது தில்லி: தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக ஸ்பிரே அமைப்புகளை தில்லி அரசு பயன்படுத்தி வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா திங்கள்கிழமை தெரிவித்தாா். மின்கம்பங்களில்... மேலும் பார்க்க

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும்: இஸ்ரோ தலைவா் அறிவுரை

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும் என்று இஸ்ரோ தலைவா் டாக்டா் வி.நாராயணன் கேட்டுக் கொண்டாா். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவா் டாக்டா் வி. நாராயணனுக்கு தில்லி தமிழ... மேலும் பார்க்க