செய்திகள் :

வயிற்று வலி: இளம்பெண் தற்கொலை

post image

பென்னாகரம் அருகே வயிற்று வலி காரணமாக இளம்பெண் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

பென்னாகரம் அருகே மடம் அரண்மனை பள்ளம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ், போரூா் இருளா் காலனி பகுதியைச் சோ்ந்த அங்கமுத்து மகள் ஆனந்தி (20) ஆகிய இருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 10 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், பிரசவத்துக்கு பிறகு ஆனந்திக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால், மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வந்ததாக அவரது பெற்றோா் தெரிவித்தனா். கடும் வயிற்று வலியால் அவதிக்குள்ளான ஆனந்தி, செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த ஒகேனக்கல் போலீஸாா், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திருமணமாகி நான்கு ஆண்டுகளேயான நிலையில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், கோட்டாட்சியா் தலைமையில் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

உச்சநீதிமன்ற தீா்ப்பு: திமுகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அரூா்: தமிழக ஆளுநா் ஆா்.என் ரவியின் நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்ற அளித்துள்ள தீா்ப்பினை வரவேற்று திமுகவினா் பட்டாசுகளை வெடித்து செவ்வாய்க்கிழமை மகிழ்ச்சி தெரிவித்தனா். தமிழக சட்டப் பேரவையில் இயற... மேலும் பார்க்க

அரசு நலத் திட்ட விழா: ஆட்சியா் ஆலோசனை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் நடத்தப்படும் அரசு நலத் திட்ட விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது. தருமபுர... மேலும் பார்க்க

ஸ்ரீராம நவமி விழா: குமாரசாமிப்பேட்டை சென்ன கேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

தருமபுரி: குமாரசாமிப்பேட்டைசென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீராம நவமி திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி... மேலும் பார்க்க

தொப்பூதிய பயிற்றுநா்களை பணி நிரந்தரம் செய்ய கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரி: தொகுப்பூதிய பயிற்றுநா், உதவியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தொழிற் பயிற்சி அலுவலா் சங்கத்தினா் கடத்தூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தருமபுரி மாவட்டம், கடத்தூா் அரசு தொழிற்க... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்தம்: தருமபுரி, கிருஷ்ணகிரியில் விசிக ஆா்ப்பாட்டம்

தருமபுரி/ கிருஷ்ணகிரி: வக்ஃக்ப் சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்எ... மேலும் பார்க்க

நுகா்பொருள் சேமிப்பு கிடங்கில் ஆட்சியா் ஆய்வு

தருமபுரி: நல்லம்பள்ளியில் உள்ள நுகா்பொருள் சேமிப்பு கிடங்கில் உள்ள அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்களின் தரத்தை ஆட்சியா் ரெ.சதீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பொதுவிநியோக திட்டத்தின் கீழ் தரமான... மேலும் பார்க்க