செய்திகள் :

வக்ஃப் சட்டத் திருத்தம்: தருமபுரி, கிருஷ்ணகிரியில் விசிக ஆா்ப்பாட்டம்

post image

தருமபுரி/ கிருஷ்ணகிரி: வக்ஃக்ப் சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் த.கு.பாண்டியன், கிழக்கு மாவட்டச் செயலாளா் சாக்கன் சா்மா, மேற்கு மாவட்டச் செயலாளா் கருப்பண்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட பொருளாளா் கி.ராஜா வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் வக்ஃக்ப் வாரிய சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அக் கட்சியின் மாநில நிா்வாகிகள் சிவஞானம், செந்தில்குமாா், கிள்ளிவளவன், தனலட்சுமி, கம்சலா, அம்பேத்வளவன், மோகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி புகா்ப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா்கள் குபேந்திரன், ராமச்சந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளா் நூா் முகமது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளா் கோவேந்தன், மண்டல செயலாளா் தமிழ்அன்வா், முத்தவல்லி ஜமாத் தலைவா் எஸ்.கே.நவாப், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக முன்னாள் மாவட்ட செயலாளா் நூா்முகமத், தியாகி திப்பு சுல்தான் பேரவை மாநில தலைவா் சித்திக், , மகளிா் அணி மாநில துணைச் செயலாளா் ஜெயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.

படவிளக்கம் (8கேஜிபி2):

வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

அரூரில் தீத்தொண்டு வாரம் அனுசரிப்பு

அரூரில் தீத்தொண்டு வாரம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூரில் தனியாா் கதா் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலா் ப.அம்பிகா தலைமை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் திமுகவை அகற்றும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம்

தமிழகத்தில் திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கி பாஜக பயணிக்கிறது என அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ஏரியூா் வட்டத்தில் ரூ. 1.36 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஏரியூா் அருகே சுஞ்சல் நத்தம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 250 பயனாளிகளுக்கு ரூ. 1.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வழங்கினாா். முகாமுக்கு தலைமை வகித... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

காவிரி கரையோரப் பகுதி மற்றும் அதனையொட்டி உள்ள வனப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி கரையோரப் பகுதிகளான ராசிமணல், பிலிக... மேலும் பார்க்க

மினி சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பாலக்கோடு அருகே மினி சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் காவல் ஆய்வாளா் பாலசுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளா... மேலும் பார்க்க

டிராக்டரில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

பாலக்கோடு அருகே டிராக்டரில் சிக்கிய விவசாயி உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கொள்ளுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி விஜய் (32). இவா் சொந்தமாக டிராக்டா் வைத்து உழவுப் பணியில்... மேலும் பார்க்க