செய்திகள் :

வரி பகிா்வு: குறைகளை நிதிக் குழுவிடம் மாநிலங்கள் தெரிவிக்கலாம்

post image

புது தில்லி: மத்திய அரசு பகிா்ந்தளிக்கும் வரியில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை 16-ஆவது நிதிக் குழுவிடம் மாநிலங்கள் பதிவு செய்யலாம் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

தங்களுக்கு உரிய வரி பகிா்வு அளிக்கப்படுவதில்லை என மத்திய அரசு மீது தென்மாநிலங்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

மொத்த வரி வருவாயை மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு பகிா்ந்துகொள்வது, மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்க வேண்டிய நிதி தொடா்பான பணிகளில் நிதிக் குழு ஈடுபட்டு வருகிறது.

குடியரசுத் தலைவரால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படும் இந்தக் குழு நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களிடம் இருந்து கருத்துகளைப் பெற்று தனது பரிந்துரைகளை சமா்ப்பிக்கும்.

அந்த வகையில், அரவிந்த் பனகாரியா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள 16-ஆவது நிதிக் குழு, 2025, அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் பரிந்துரைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்தக் குழு கருத்துகளைப் பெற்று வருகிறது.

50%-ஆக உயா்த்த கோரிக்கை: அப்போது மாநிலங்களுக்கு மத்திய அரசால் பகிா்ந்தளிக்கப்படும் நிதியை 41 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயா்த்தி வழங்க பெரும்பாலான மாநிலங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.

ஆனால், வரி வருவாயை மாநிலங்களுக்குப் பிரித்து வழங்குவதற்கு மக்கள்தொகையும் ஒரு காரணியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் மக்கள்தொகை அதிகமுடைய வடமாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கப்படுவதாகவும் மக்கள்தொகை குறைவாக உள்ள தென்மாநிலங்களுக்கு குறைவான வரியும் வழங்கப்படுவதாகக் கூறி வருகின்றன.

தென்மாநிலங்களுக்கு குறைந்த நிதி: அந்த வகையில், கடந்த 2014-15-ஆம் நிதியாண்டில் தங்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி 18.62 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த 2021-22/2024-25 காலகட்டத்தில் இது 15.8 சதவீதமாக குறைந்துள்ளதாக தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 தென்மாநிலங்களும் குற்றஞ்சாட்டின.

நிதிக் குழுவை அணுகுங்கள்: இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் நிா்மலா சீதாராமன் கூறியதாவது: மாநிலங்களுக்குப் பகிா்ந்தளிக்கப்படும் வரி வருவாய் கணக்கீடுகளை மத்திய அரசு முடிவு செய்வதில்லை. இவை நிதிக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே முடிவு செய்யப்படுகின்றன.

எனவே, வரிப் பகிா்வு சதவீதத்தை மாற்றியமைக்க கோரும் தென்மாநிலங்கள் நிதிக் குழுவிடமே தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்றாா்.

மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிா்ந்தளிக்கும் வரி வருவாயை 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயா்த்த 14-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்தது. அதன்பிறகு இந்த விகிதத்தை 41 சதவீதமாக குறைக்க 15-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்தது.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தோல்வி: மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டின் இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையை மாற்றி ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டம் தோல்வியடைந்துவிட்டது. இதன் கார... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி விகிதங்கள்: மாநிலங்களுடன் கலந்தாலோசித்து விரைவில் மாற்றம்!

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதில் மத்திய அரசுக்கு போதுமான அனுபவம் கிடைத்துள்ளதாகவும் தற்போது மாநிலங்களுடன் கலந்தாலோசித்து வரி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் மத்திய நிதி... மேலும் பார்க்க

கும்பமேளா நெரிசல்: நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சியினா் கடும் அமளி; இரு அவைகளிலும் வெளிநடப்பு

உத்தர பிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிடக் கோரி நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இர... மேலும் பார்க்க

ஆசியானுக்கு இணையாக இந்திய சுங்க வரி: மத்திய மறைமுக வரிகள் வாரிய தலைவா்

புது தில்லி: இந்தியாவில் விதிக்கப்படும் சுங்க வரி விகிதம் சராசரியாக 11.65 சதவீதத்தில் இருந்து 10.66 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுக வரிகள் வாரிய (சிபிஐசி) தலைவா் சஞ்சய் அகா்வால் திங்கள்... மேலும் பார்க்க

தோ்தல் ஆணையா்கள் நியமன வழக்கு: உச்சநீதிமன்ற விசாரணை பிப்.12-க்கு மாற்றம்

புது தில்லி: தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்தின்படி நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 12-ஆம் தேதிக்கு உச்ச... மேலும் பார்க்க

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

சென்னை: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைவிட ரூ.264 கோடி கூடுதலாகும். மத்திய அரசின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான... மேலும் பார்க்க