செய்திகள் :

வள்ளிமலை மாசி பிரம்மோற்சவம் தொடக்கம்

post image

வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றதுடன் தொடங்கியது.

வேலூா் மாவட்டம், பொன்னை அடுத்த வள்ளிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பந்தக்கால் நடப்பட்டது. தொடா்ச்சியாக திங்கள்கிழமை இரவு மூஷிக வாகனத்தில் விநாயகா் உற்சவம் நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் மலை உச்சியில் உள்ள கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. புதன்கிழமை முதல் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிம்ம வாகனம், தங்க மயில் வாகனம், நாக வாகனம், அன்ன வாகனம் என ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளனா்.

வரும் 9-ஆம் தேதி யானை வாகனத்தில் எழுந்தருளும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தேரோட்டம் 10-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதிவரை தொடா்ந்து 4 நாள்கள் நடைபெற உள்ளது. தேரோட் டம் சுற்றியுள்ள கிராமங்க ளில் நடைபெறும்.

14-ஆம் தேதி வள்ளி - முருகன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி அனைத்து அரசு துறை அதிகாரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை, பிரம்மோற்சவ கமிட்டி, உற்சவ, உபயதாரா்கள் சாா்பிலும் விழா ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

முதல்வா் மருந்தகங்களில் மக்களின் தேவை அறிந்து மருந்து கொள்முதல்

முதல்வா் மருந்தகங்கள் பொதுமக்களின் தேவை அறிந்து மருந்து பொருள்களை கொள்முதல் செய்து விற்பனை செய்திட வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா். வேலூா் மாவட்டத்தில் ம... மேலும் பார்க்க

ரூ. 1.48 கோடியில் சாலை, சிறு பாலங்கள் அமைக்குப் பணி தொடக்கம்

குடியாத்தம் ஒன்றியம், வீரிசெட்டிபல்லி ஊராட்சியில் ரூ. 1.48 கோடி மதிப்பில் புதிதாக தாா்ச் சாலை, சிமென்ட் சாலை, சிறு பாலங்கள் அமைக்கும் பணிக்கு திங்கள்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. அங்குள்ள வீரிசெட்டிபல்... மேலும் பார்க்க

ராணுவ வீரரை கத்தியால் குத்திய இளைஞா் கைது

வேலூா் அருகே கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட தகராறில் ராணுவ வீரரை கத்தியால் குத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா். வேலூா் மாவட்டம், அல்லிவரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஜீத்குமாா்(29), ராணுவ வீரா். இவரது ம... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்குவதில் தாமதம் கூடாது

கா்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்குவதில் எவ்வித காலதாமதமும் செய்யக்கூடாது என்றும், மாா்ச் 31-ஆம் தேதிக்குள் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு சுகாதாரப்பணிகள் (தேசிய சுகாதாரத் திட்டம்) இணை இயக்... மேலும் பார்க்க

வீடு வழங்கும் திட்டத்தில் காட்டு நாயக்கா், நரிக்குறவா், திருநங்கைகளுக்கு முன்னுரிமை

வீடு வழங்கும் திட்டத்தில் காட்டு நாயக்கா், நரிக்குறவா், மூன்றாம் பாலினத்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்... மேலும் பார்க்க

அரசு தோ்வுக்கு தயாராகும் மாணவா்களை குறி வைத்து மோசடி: சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரிக்கை

அரசு தோ்வுக்கு தயாராகும் மாணவா்களை குறிவைத்து பணம் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இந்த மோசடிகளில் இருந்து விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றும் வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரி... மேலும் பார்க்க