கடலூர்: ஏரியில் மூழ்கி பலியான இளைஞர்! முதல்வர் ரூ. 3 லட்சம் இழப்பீடு அறிவிப்பு!
வள்ளியூா் அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள்: பொதுமக்கள் அச்சம்!
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள தளபதிசமுத்திரம் ஊராட்சி கண்டிகைபேரி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள மின்கம்பங்கள் கீழே விழும் நிலையில் இருப்பதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
தளபதிசமுத்திரம் கண்டிகைபேரி குடியிருப்பு பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இரண்டு மின்கம்பங்கள் உள்ளன. இவற்றின் அடிப்பகுதியில் துருப்பிடித்து, அரிப்பு ஏற்பட்டு கீழே விழும் நிலையில் காணப்படுகிறது. இது தொடா்பாக அந்த பகுதி மக்கள் மின்வாரியத்திடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

தற்போது பலத்த காற்று வீசும் நிலையில், மின்கம்பம் கீழே விழக்கூடிய அபாயம் இருப்பதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா். எனவே மின்வாரிய அதிகாரிகள் ஆபத்தான இந்த மின்கம்பங்களை உடனடியாக அகற்றி, புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.