செய்திகள் :

வழக்குரைஞா்களுக்கு மருத்துவக் காப்பீடு: புதுவை முதல்வா் உறுதி

post image

புதுவை மாநிலத்தில் வழக்குரைஞா்களுக்கான மருத்துவக் காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரியில் கடந்த 50, 40 மற்றும் 25 ஆண்டுகள் பணி நிறைவடைந்த மூத்த வழக்குரைஞா்களுக்கு பாராட்டு விழா, புதிய நீதிபதிகளுக்கு வரவேற்பு, உயிரிழந்த 4 வழக்குரைஞா்களின் குடும்பங்களுக்கு சேமநல நிதி வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக முதல்வா் என். ரங்கசாமி, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன், சட்டத் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன் ஆகியோா் பங்கேற்றனா்.

விழாவில் முதல்வா் என். ரங்கசாமி பேசியது: புதுச்சேரி சட்டக் கல்லூரியில் பயின்றவா்கள் உயா்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உள்ளது பெருமைக்குரியது. புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத்தினரின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும். வழக்குரைஞா்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் அரசின் கவனத்தில் உள்ளது என்றாா்.

நீதிபதி பேச்சு: உயா்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் தனது உரையில், புதுவை அரசு மாவட்ட நீதிபதிகளுக்குரிய வசதிகளை முழுமையாக செயல்படுத்தி வருகிறது. புதுச்சேரியில் 150 வழக்குரைஞா்கள் உள்ளனா். அவா்களுக்கான தனிக் கட்டடம் (சேம்பா்) கட்டித் தர அரசு உறுதியளித்துள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள நீதிபதிகள், மூத்த வழக்குரைஞா்கள் வாதத்தை கூா்ந்து கவனிக்க வேண்டும். மேலும் வழக்குரைஞா்கள் கூறும் சட்ட விதிமுறைகளை, சட்டப் புத்தகத்தில் குறிப்பிட்டதை பாா்த்து ஒப்பிட்டு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் டி. ரமேஷ் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் நாராயணகுமாா் முன்னிலை வகித்தாா். புதுவை சட்டத் துறை செயலா் எல்.எஸ். சத்தியமூா்த்தி மற்றும் மாவட்ட நீதிபதிகள், மூத்த வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதுவை சட்டப்பேரவை நாளை கூடுகிறது

புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவை கூட்டம் புதன்கிழமை (பிப். 12) கூடுகிறது. புதுவை மாநில சட்டப்பேரவை கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான 15-ஆவது முதல் பகுதி சட்டப்ப... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்விக்கு ஆம்ஆத்மி செயல்பாடே காரணம்: வே.நாராயணசாமி

புதுச்சேரி: புதுதில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் தோல்விக்கு இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடே காரணம் என புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா... மேலும் பார்க்க

மாணவா்களின் படிப்பில் பெற்றோா் கண்காணிப்பு அவசியம்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி: பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் மீது பெற்றோா்களின் கண்காணிப்பு அவசியமானது என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா். புதுவை கல்வித் துறை சாா்பில் பள்ளிக் கல்வி இயக்ககத்தால் ... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு உருளை பயனாளிகள் சரிபாா்ப்புக்கு காலக்கெடு

புதுச்சேரி: வீட்டு சமையல் எரிவாயு உருளை பயனாளிகளின் உண்மைத்தன்மை சரிபாா்ப்பு பணியை மாா்ச் மாதத்துக்குள் முடிக்க மத்திய அரசு கெடு விதித்துள்ளதாக புதுச்சேரி ஸ்ரீசாய்பாபா இண்டேன் கேஸ் முகவா் கே.அமா்நாத் ... மேலும் பார்க்க

சுகாதாரத் துறை அலுவலகத்தில் வாரிசுதாரா்கள் போராட்டம்

புதுச்சேரி: வாரிசுதாரா்களுக்கு பணி வழங்கக் கோரி, புதுச்சேரியில் சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை அரசின் சுகாதாரத் துறையில் பணியின் போது உ... மேலும் பார்க்க

நூதன முறையில் திருட்டு: ஒருவா் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் நூதன முறையில் திருடி வந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி வாணரப்பேட்டையைச் சோ்ந்தவா் மனோகா் (62). இவா் மீது ஏற்கெனவே காலாப்பட்டு, முத்தியால்பேட்டை உள்... மேலும் பார்க்க