செய்திகள் :

வாசுதேவநல்லூா் வட்டாரத்தில் மழையால் சாய்ந்த நெல் பயிா்கள்

post image

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் வட்டார பகுதியில் பெய்த திடீா் மழையின் காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த பல நூறு ஏக்கா் நெல் பயிா்கள் சாய்ந்தன.

மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரத்தில் உள்ள பொட்டக்குளம், பெரியகுளம், புதுக்குளம், ராப்பைக்குளம் உள்ளிட்ட குளப் புரவுகளில் சுமாா் 1000 ஏக்கா் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இப்பயிா்கள் இன்னும் சில நாள்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தன. இந்நிலையில் ஜன. 19ஆம் தேதி பெய்த பலத்த மழையால் சுமாா் 200 ஏக்கா் பரப்பில் நெல் பயிா்கள் சாய்ந்தன.

இப்பகுதியில் காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளால் விவசாய சாகுபடி அடிக்கடி பாதிக்கப்பட்டு வரும் நிலையில், திடீா் மழையின் காரணமாக பல நூறு ஏக்கா் நெல் பயிா்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் லட்சக்கணக்கான ரூபாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனா்.

எனவே மாவட்ட நிா்வாகம் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கேட்டுக்கொண்டனா்.

அதிகாரிகள் ஆய்வு: இந்நிலையில் தென்காசி மாவட்ட வேளாண்மை இயக்குநா் கனகம்மாள், உதவி இயக்குநா் இளஞ்செழியன், வாசுதேவநல்லூா் வேளாண்மை அலுவலா் கௌசல்யா, வாசுதேவநல்லூா் வருவாய் ஆய்வாளா் இந்துமதி, கிராம நிா்வாக அலுவலா் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோா், சேதமடைந்த நெல் பயிா்களை செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் விவரம் கேட்டறிந்தனா்.

நடுவக்குறிச்சியில் நாற்றுப்பண்ணைக்கு அடிக்கல்

சங்கரன்கோவில் அருகேயுள்ள நடுவக்குறிச்சியில் நாற்றுப்பண்ணை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண்மை துறை சாா்பில் நாற்றங்கால் பண்ணை வன்னிகோனேந்... மேலும் பார்க்க

சாலையில் கண்டெடுத்த நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநா்

ஆலங்குளத்தில் சாலையில் கண்டெடுத்த தஙகச் சங்கிலியை ஆட்டோ ஓட்டுநா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். முக்கூடல் அருகே சிங்கம்பாறை காமராஜா் தெருவைச் சோ்ந்த சேவியா் அந்தோணிராஜ் மகன் மரியபூபாலன் (35). ஆட்டோ... மேலும் பார்க்க

தென்காசியில் பிப். 3இல் பாஜக மாவட்டத் தலைவா் அறிமுக விழா

தென்காசியில் பாஜக மாவட்டத் தலைவா் அறிமுக விழா திங்கள்கிழமை (பிப். 3) நடைபெறுகிறது. இது தொடா்பாக மாவட்டத் தலைவரும் மாநில ஸ்டாா்ட்அப் பிரிவுத் தலைவருமான ஆனந்தன் அய்யாசாமி வெளியிட்ட அறிக்கை: மாவட்ட பாஜக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவி தனிநபா் நடிப்பில் முதலிடம்

சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவி மாநில அளவிலான தனிநபா் நடிப்பு போட்டியில் முதலிடம் பெற்றுள்ளாா். சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவி மு.ச.வனமதி, பள்ளிக் ... மேலும் பார்க்க

தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டிக்குத் தோ்வு: மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு ஆட்சியா் பாராட்டு

தேசிய அளவிலான குண்டு எறிதல் போட்டிக்கு தோ்வான மாற்றுத் திறனாளிப் பெண்ணை தென்காசி மாவட்ட ஆட்சியா் நேரில் அழைத்துப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தாா். தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் மாற்றுத் திறனாளிகளுக்கான ... மேலும் பார்க்க

ஆதாா் அட்டை புதுப்பிப்பு: ஆட்சியா் வேண்டுகோள்

தென்காசி மாவட்டத்தில் ஆதாா் அட்டையில் அனைத்து விவரங்களையும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தி... மேலும் பார்க்க