செய்திகள் :

வாழ்க்கை - வேலை சமநிலைப்படுத்த திணறுகிறீர்களா? இதோ டின்டிம் பென்குயின் பற்றிய கதை!

post image

வாழ்க்கை - வேலையை சமநிலைப்படுத்த திணறி வரும் மனிதர்களுக்கு இடையே, வலசை செல்லாமல் தன்னைக் காப்பாற்றிய மீனவரைக் காண ஆண்டுதோறும் வந்துகொண்டிருந்த டின்டிம் என்ற பென்குயின் உலகளவில் புகழ்பெற்றது.

உலகிலேயே விலங்குகளைப் போலவே, மனிதனும் தனது வாழ்வுக்காக நாள்தோறும் வேலை வேலை என்று அலைந்து திரிந்துகொண்டிருக்கிறான்.

ஆனால், எல்லா விதிகளையும் உடைத்தெறிந்துவிட்டு, தனது அன்பை வெளிப்படுத்த வலசை செல்வதைத் தவிர்த்து கொடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் 5,000 கிலோ மீட்டர் பயணித்து, பிரேசில் கடற்கரையில் தன்னைக் காப்பாற்றிய மீனவரைச் சந்திக்க ஆண்டுதோறும் வந்துகொண்டிருந்த டின்டிம் உலகளவில் பெயர் பெற்றது. சிறந்த அன்புக்கு அடையாளமாகிப்போனது.

கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு அது மீனவரைக் காண வருவதை நிறுத்திவிட்டது. ஆனால், அது இளமைப் பருவத்தை அடைந்து, இனப்பெருக்கத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், அதனால்தான், டின்டிம், மீனவரைக் காண வராமல் போயிருக்கலாம் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

சம்பவம் நடந்தது பிரேசிலில், கடந்த 2011ஆம் ஆண்டு, ஜோவோ என்ற மீனவர், கடலில் எண்ணெய் கழிவுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு பென்குயினை மீட்டு அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடல் நலம் தேறிய பிறகு அதனைக் கடலில் விடுவித்தார்.

டின்டிம் என்று பென்குயினை அன்போடு அழைத்து வந்த மீனவர், அதற்கு கனத்த மனதுடன் பிரியாவிடை அளித்தார். அதுவும் தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாவும் இருந்த மீனவரை விட்டுப் பிரிய மனமில்லாமல்தான் பிரிந்து சென்றது.

பிறகு அவர் எதிர்பாராத ஒரு திருப்பம் நேரிட்டது. அதுதான், 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சரியாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மற்ற பென்குயின்கள் எல்லாம் வலசை செல்லும் நேரத்தில், இந்த டின்டிம் மட்டும் சுமார் 5,000 கிலோ மீட்டர் ஓடோடி வந்து மீனவரைச் சந்தித்து வந்துள்ளது.

பிரேசில் கடற்கரைக்கு டின்டிம் வரும்போது அங்கு திருவிழாப் போல காணப்படும். டின்டிம் அன்பாலும் மீனவரின் மகிழ்ச்சியாலும்

பறவையோ விலங்கோ தங்களது வாழ்க்கைச் சுழற்சியை பெரும்பாலும் விட்டுக் கொடுப்பதில்லை. மாறாக, இந்த டின்டிம் மட்டும், குளிரிலிருந்து தப்பிக்க வலசை செல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட மாதத்தில், தன் உயிரைக் காப்பாற்றிய மீனவர் ஜோவோ பெரைய்ரா டி சௌஸாவைக் காண வந்துவிடும்.

அவரைக் கொஞ்சி மகிழ்ந்து விளையாடி அவர் கொடுக்கும் உணவை சாப்பிட்டுவிட்டு, தனது தன்றியை உச்சி முகர்ந்து சொல்லிவிட்டு மீண்டும் தன் இருப்பிடத்துக்குச் சென்றுவிடுமாம். கடைசியாக 2016ஆம் ஆண்டு ஜோவோவைக் காண வந்த டின்டிம், மிக விரைவாகவே அங்கிருந்துப் புறப்பட்டுச் சென்றிருக்கிறது.

பிறகு, 2017ஆம் ஆண்டு முதல் ஜோவோ கடற்கரையில் வழக்கம் போல ஒவ்வொரு ஜூன் மாதமும், தன்னுடைய அன்பு டின்டிம் வரும் என்று தவறாமல் காத்திருக்கிறார். ஆனால், அது வரவில்லை. அது தனது இனப்பெருக்கக் காலத்தில் இருக்கலாம், ஒரு நாள் நிச்சயம் ஜோவோவைக் காண வரலாம் என்றே பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

DinDim, a penguin who came every year to visit the fisherman who saved him, became world famous.

இதையும் படிக்க... சென்னையில் இன்றும் நாளையும் கனமழை!

உமாபதி ராமையா இயக்கத்தில் நட்டியின் புதிய படம்!

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று (அக். 3) நடைபெற்றுள்ளது. ‘ராஜா கிளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், உமாபதி ராமையா. இந்த நிலையில், நடி... மேலும் பார்க்க

கேரளத்தில் முதல்முறை... வரலாறு படைத்த லோகா!

நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனின் லோகா திரைப்படம் கேரளத்தில் புதிய வரலாறு படைத்துள்ளது. துல்கர் சல்மான் தயாரிப்பில் டோமினிக் அருண் இயக்கிய லோகா சேப்டர்: சந்திரா திரைப்படம் கடந்த ஆக.28ஆம் தேதி வெளியானது. உலக... மேலும் பார்க்க

உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற மணிப்பூர் வீராங்கனை!

உலக சாம்பியன்ஷிப் பளு தூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு (31 வயது) வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார். உலக சாம்பியன்ஷிப்பில் இத்துடன் இவர் மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கத... மேலும் பார்க்க

அரிசியைவிட கோதுமை நல்லதா? நீரிழிவு நோய் வர இதுதான் காரணம்! - ஆய்வில் தகவல்!

கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து நிரம்பிய பொருள்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக எடுத்துக்கொள்வதே நீரிழிவு நோய்க்கு காரணமாக இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. நீரிழிவு நோய், ரத்த அ... மேலும் பார்க்க

சாமுண்டி தசரா... ருக்மணி வசந்த் பகிர்ந்த காந்தாரா பட போஸ்டர்!

நடிகை ருக்மணி வசந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் காந்தாரா சேப்டர் 1 படத்தில் இருந்து புதிய போஸ்டரைப் பகிர்ந்துள்ளார். இந்தப் போஸ்டரில் சாமுண்டி தசராவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். காந்தாரா சேப்டர் ... மேலும் பார்க்க

2026 ஃபிஃபா உலகக் கோப்பை: சென்சார் பதிந்த கால்பந்து அறிமுகம்!

2026 கால்பந்து உலகக் கோப்பை போட்டிக்கான பந்தை ஃபிஃபா அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தப் பந்து போட்டியை நடத்தும் மூன்று நாடுகளின் வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகள் அடுத்தாண... மேலும் பார்க்க