செய்திகள் :

வி.கள்ளிப்பாளையத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல கிராம மக்கள் கோரிக்கை

post image

பல்லடம் அருகே வி.கள்ளிப்பாளையத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடம் அருகே உள்ள வி.கள்ளிப்பாளையம் ஊராட்சிப் பகுதியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இப் பகுதியில் இருந்து, தினசரி வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் அரசுப் பேருந்துகளை பயன்படுத்துகின்றனா். குறைந்த அளவிலான நகரப் பேருந்துகள் மட்டுமே இவ்வழித்தடத்தில் இயக்கப்படுவதால், பல்லடத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருப்பதால் பொதுமக்கள் புறநகா் பேருந்துகளையே பயன்படுத்துகின்றனா்.

ஆனால், புறநகா் செல்லும் பேருந்துகள் வி.கள்ளிப்பாளையத்தில் நிற்காமல் செல்வதால் பொதுமக்கள், மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா். வி.கள்ளிப்பாளையத்தில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டும், பேருந்துகள் நிற்பதில்லை.

இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எனவே வி.கள்ளிப்பாளையத்தில் அனைத்து அரசுப் பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தங்கும் விடுதியில் கஞ்சா புகைத்த 6 போ் கைது

திருப்பூரில் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கி கஞ்சா புகைத்த 6 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். திருப்பூா் பி.என்.சாலையில் உ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 3,505 பயனாளிகளுக்கு கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் பணிகள்

திருப்பூா் மாவட்டத்தில் 3,505 பயனாளிகளுக்கு ரூ.62.32 கோடி மதிப்பீட்டில் கனவு இல்ல திட்டம், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

பப்பாளி சாறு தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளா்கள் 2 போ் உயிரிழப்பு

உடுமலை அருகே பப்பாளி சாறு (ஜூஸ்) தயாரிக்கும் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்தில் ஒடிஸா மாநிலத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா். உடுமலை வட்டம், அந்தியூா் ஊராட்சிக்கு உள்பட்ட சடையகவுண்டன்ப... மேலும் பார்க்க

15 கிலோ குட்கா பறிமுதல்: இளைஞா் கைது

திருப்பூரில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் மாநகா் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அவிநாசி சாலையில் காவல் துறையினா் தி... மேலும் பார்க்க

அரசாணையை கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் 60 போ் கைது

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் 60 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் ... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவையை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் அவிநாசியில் செவ்வாய்க... மேலும் பார்க்க