செய்திகள் :

"விஜய்யை இப்படித்தான் சினிமாவுக்கு அறிமுக செய்ய விரும்பினேன். ஆனால்..." - எஸ்.ஏ.சந்திரசேகர்

post image

அறிமுக இயக்குநர் சிவப்பிரகாஷ் இயக்கத்தில் இயக்குநர் தங்கர் பச்சான் மகன் விஜித் நடிக்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’. இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சீமான், சினேகன், கரு.பழனியப்பன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசியிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், "தங்கர் பச்சன் பெரிய இயக்குநர். அவர் தன் மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தும்போது, அவரே இயக்கி படம் எடுக்கவில்லை. வேறொரு அறிமுக இயக்குநர் படத்தில், தன் மகனை நடிக்க வைத்திருகிறார்.

`விஜய் நடிக்க ஆசைப்பட்டபோது...’

என் மகன் விஜய் நடிக்க ஆசைப்பட்டபோது இதைத்தான் நான் செய்ய நினைத்தேன். நானே என் மகனை அறிமுகப்படுத்த நினைக்கவில்லை. அப்போது பல படங்களை இயக்கி பரபரப்பாக இருந்தேன். அதனால் விஜய்யை போட்டோக்களை எடுத்துக் கொண்டு பல தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களிடம் 'என் மகனை வைத்துப் படம் பண்ணுங்கள்' எனக் கேட்டேன். அது நடக்கவில்லை. ஆர்.பி.செளத்ரி சார்தான் 'நீயே பெரிய இயக்குநர், உன் மகனை வைத்து நீயே படம் எடு' என்றார். அதன்பிறகே நான் விஜய்யை வைத்து படம் எடுத்து, அவரை அறிமுகப்படுத்தினேன்.

எஸ்.ஏ.சந்திரசேகர்

சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஆதரவு கொடுங்கள்

இப்போதெல்லாம் படம் வெற்றிபெற என்னவேண்டுமானலும் செய்கிறார்கள். வெற்றியைத் தாண்டி நல்ல கதையை படமாக்கி, அதை வெற்றி பெற வைக்க வேண்டும். ஒவ்வொரு இயக்குநருக்கும் பொறுப்புணர்ச்சி வேண்டும். பார்வையாளர்கள் நல்ல திரைப்படங்களை கொண்டாடி வரவேற்க வேண்டும். நல்ல படங்கள், சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஆதரவு கொடுங்கள்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

TASMAC Raid: "பொய் தகவல் கூறி வழக்கை திசைதிருப்ப முயற்சி" - தமிழக அரசை குற்றம்சாட்டும் அமலாக்கத்துறை

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்குகள், இன்று நீதி... மேலும் பார்க்க

Article 142, உச்ச நீதிமன்றம் : "ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணை" - ஜக்தீப் தன்கர் காட்டம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காததையடுத்து, திமுக அரசு தாக்கல் செய்த ரிட் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏப்ரல் 8-ம் தேதியன்று ஒரு அ... மேலும் பார்க்க

`குளோபல் ஜாப் மார்க்கெட்; எனது கனவு’ - துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதல்வர் பேசியதென்ன?

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்."'போதும்' என நினைக்கக் கூடாது" இதில் பேசி... மேலும் பார்க்க

Article 142 மூலம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த உச்ச நீதிமன்றம் - விவாதிக்கப்படுவது ஏன்? | In-Depth

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கெதிரான தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநிற... மேலும் பார்க்க

நாங்குநேரி சின்னதுரை மீது மீண்டும் கொடூர தாக்குதல் - 5 பேர் கொண்ட மர்மக் கும்பல் யார்?

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை, 2023-ம் ஆண்டு பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்த போது சாதிய பாகுபாடு காரணமாக சக மாணவர்களால் வீடு புகுந்து கொடூரமாக அரிவாளால் வெட்டப்பட்டார். அதில்... மேலும் பார்க்க

`திமுக நீர் மோர் பந்தலுக்காக குப்பை வண்டியில் சென்ற குடிநீர்' - அதிர்ச்சி வீடியோ, வலுக்கும் கண்டனம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சாமளாபுரம் பேரூராட்சித் தலைவராக உள்ளவர் திமுக-வைச் சேர்ந்த விநாயகா பழனிசாமி. இவரது ஏற்பாட்டில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, சாமளாபுரத்தில் நீர் மோர் பந்தல் ... மேலும் பார்க்க