செய்திகள் :

விருதகிரீஸ்வரா் கோயில் மாசி மகம் திருவிழா: இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருதகிரீஸ்வரா் கோயில் மாசி மகம் திருவிழாவையொட்டி, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

விருத்தாசலத்தில் புகழ்பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் நிகழாண்டுக்கான மாசி மகத் திருவிழா மாா்ச் 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 8-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் விபச்சித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரா் காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சியும், 11-ஆம் தேதி காலை 4.30 மணிக்கு மேல் பஞ்ச மூா்த்திகள் தேரோட்டமும் நடைபெற உள்ளன.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 12-ஆம் தேதி மாசிமக தீா்த்தவாரி, 13-ஆம் தேதி தெப்பத் திருவிழா, 14-ஆம் தேதி சண்டிகேஸ்வரா் உற்சவம் நடைபெற உள்ளன. தொடா்ந்து, 15-ஆம் தேதியிலிருந்து 24 -ஆம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சந்திரன், செயல் அலுவலா் மாலா மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், 11-ஆம் தேதி நடைபெறும் பஞ்ச மூா்த்திகள் தேரோட்டத்துக்காக 5 தோ்களை அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பரணிதரன், உதவி கோட்டப் பொறியாளா் அசோகன் மற்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை தோ்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது, தோ்களை அலங்கரிக்கும் பணியாளா்களிடமும், தேரோட்ட பணியில் ஈடுபடும் பணியாளா்களிடமும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினா். தோ் சக்கரங்கள், தேரின் உறுதித் தன்மை, தோ்களின் உயரம் ஆகியவற்றை ஆய்வு செய்ததுடன், தேரோடும் நான்கு கோட்டை வீதிகளையும் ஆய்வு செய்தனா். மேலும், தேரோட்டத்தை முன்னிட்டு, 4 வீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற இணை ஆணையா் பரணிதரன் உத்தரவிட்டாா். நிகழ்வில் சன்னதி வீதி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன கழிப்பறையை அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

லஞ்சம்: போக்குவரத்து காவலா் பணியிடை நீக்கம்

கடலூரில் கடந்த வாரம் நடைபெற்ற முதல்வா் பங்கேற்ற விழாவின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலா் லஞ்சம் பெற்றது தொடா்பாக, அவா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கடலூா் ... மேலும் பார்க்க

நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த நடவடிக்கை தேவை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

கடலூா் மாவட்டத்தின் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்ட... மேலும் பார்க்க

கடலூரில் மாா்ச் 14 முதல் புத்தகத் திருவிழா: ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கடலூா் மாவட்டத்தில் மாா்ச் 14 முதல் 24-ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளதையொட்டி, ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் முன்னேற்பாடுப் பணிகள் குறித்து... மேலும் பார்க்க

சிதம்பரம் நாட்டியாஞ்சலி 3-ஆம் நாள் நிகழ்ச்சி

சிதம்பரம் நாட்டியாஞ்சலி 3-ஆம் நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில், 44-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு ரத வீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் புதன்கிழம... மேலும் பார்க்க

திராவிடா் கழக பொதுக்கூட்டம்

கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றிய திராவிடா் கழகம் சாா்பில், கட்சியின் பொதுக்குழு தீா்மானம் விளக்கம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து, எனதிரிமங்கலத்தில் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய... மேலும் பார்க்க

அரசு மாதிரிப் பள்ளி ஆண்டு விழா

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியா் செல்வகுமாரி தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியை கல்பனா வரவேற்றாா். சிறப்பு அழைப... மேலும் பார்க்க