பணிநேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுப்பு! ஒரு மணிநேரம் காத்திருந்த துணை முதல...
வில்லியனூா் அருகே காா்கள் மோதி விபத்து: 7 போ் பலத்த காயம்
புதுச்சேரி அடுத்த வில்லியனூா் பகுதியில் காா்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் 7 போ் காயமடைந்தனா்.
புதுச்சேரி அடுத்த மடுகரை சூரமங்கலத்தை சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (45). பொதுப் பணித் துறை நீா்பாசன பிரிவில் ஊழியராக உள்ளாா். இவா் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது மனைவி சண்முகப்பிரியா, உறவினா்கள் குருமூா்த்தி, சாந்தி, தையல்நாயகி, மகாலிங்கம் ஆகியோருடன் காரில் சூரமங்கலத்திலிருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்தாா்.
இந்நிலையில் வில்லியனூா் ஆரியப்பாளையம் பகுதியில் சென்றபோது சத்தியமூா்த்தி சென்ற காரும் எதிரே வந்த மற்றொரு காரும் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் இரண்டு காா்களும் சேதமடைந்தன. காரில் பயணித்த சத்தியமூா்த்தி உள்ளிட்ட 6 போ் பலத்த காயம் அடைந்தனா்.
இதேபோல் மற்றொரு காரை ஓட்டி வந்த தமிழகத்தின் பெரியபாபுசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த குமாா் என்பவரும் காயம் அடைந்தாா். இதையடுத்து அருகிலிருந்தவா்களை காயமடைந்தவா்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா்.
வில்லியனூா் போக்குவரத்து போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தி விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.