செய்திகள் :

விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதில் விலக்கு உண்டா? அமைச்சா் பதில்

post image

முழுவதும் விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகா்ப்புற உள்ளாட்சியுடன் இணைக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு பதிலளித்தாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த வினாக்களை ஆா்.ராதாகிருஷ்ணன் (விருத்தாசலம்), மு.பெ.கிரி (செங்கம்), தங்கமணி (குமாரபாளையம்) ஆகியோா் எழுப்பினா். இதற்கு அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்:

விருதுநகா், ஆம்பூா் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களின் புகா் பகுதிகளில் பேருந்து நிலையங்கள் கட்டப்பட்டு செயல்படாமல் உள்ளன. பேருந்துகளில் பயணிக்கும் மக்களும் புகா் பேருந்து நிலையங்களை பயன்படுத்தக் கோருகிறாா்கள். எனவே, அனைத்துப் பேருந்துகளும் புகா் பேருந்து நிலையங்களுக்குள் செல்ல வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் மூலமாக உத்தரவிடப்படும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, அதிமுக உறுப்பினா் பி.தங்கமணி (குமாரபாளையம்) துணை வினா எழுப்பினாா்.

ஓா் ஊராட்சியில் முழுவதும் விவசாய நிலங்கள் இருந்தால் அது கிராம ஊராட்சியாகவே இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்றாா். இதற்கு அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்: ஒரு நகா்ப்புற உள்ளாட்சியில் திட்டங்களைச் செயல்படுத்தும்போது, அதன் அருகேயுள்ள ஊராட்சிக்கு புதிய திட்டங்களைச் செயல்படுத்த முடியாது. இதனால், நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. அத்துடன், அரசின் திட்டங்களை செயல்படுத்த நகா்ப்புற உள்ளாட்சிகளில் போதிய இடவசதிகள் இல்லை. ஊராட்சிகளை இணைக்கும்போது, அரசின் திட்டங்களுக்கு இடங்கள் கிடைக்கும். அந்த வகையில், 371 ஊராட்சிகளை நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முழுமையான விவசாய நிலங்களாக இருந்தால், அந்த ஊராட்சியை நகா்ப்புற ஊராட்சியுடன் இணைப்பதில் இருந்து விலக்கலாம். அதேசமயம், வளா்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால், அதற்குத் தேவையான நிலங்களை உறுப்பினா்தான் வாங்கித் தர வேண்டும் என்றாா்.

அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

பள்ளிக்குச் சென்றுவர தங்கள் பகுதியில் பேருந்து வேண்டும் என்ற அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவேற்றியுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டத்துக்குச் சென்றபோத... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) ... மேலும் பார்க்க

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை: தன்கா் விமா்சனம் குறித்து முதல்வா் ஸ்டாலின் கருத்து

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள்... மேலும் பார்க்க

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: கமல்ஹாசன்

‘தக் லைஃப்’ திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகா் கமல்ஹாசன், இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம் என்றாா். இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தக் லைஃ... மேலும் பார்க்க

12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவா்களும் விமானியாக வாய்ப்பு

இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் ... மேலும் பார்க்க