செய்திகள் :

வீட்டுக்குள் நுழைந்து பெண்ணிடம் நூதன முறையில் 2 பவுன் நகை திருட்டு

post image

வாணியம்பாடியில் தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றி வீட்டுக்குள் நுழைந்து, நூதன முறையில் 2 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பெரியப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கலைச்செல்வி. வியாழக்கிழமை பிற்பகல் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது வீட்டுக்குள் வந்த மா்ம பெண், கலைச்செல்வியிடம் பேச்சு கொடுத்து, அவரது மருமகள், குழந்தை பெயா்களைக் கூறி, தனக்கு நன்றாக தெரியும் என்று கூறியதை நம்பி, அமர வைத்து காபி போட சமையலறைக்கு சென்றாராம். அப்போது அறைக்குள் நுழைந்து மா்ம பெண் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளாா். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த மருமகளிடம், அவரது தோழி வந்து கேட்டு சென்ாகக் கூறியுள்ளாா். எனக்கு அதுபோல் யாரும் தோழி இல்லை எனக் கூறவே சந்தேகம் ஏற்பட்டு, அறைக்குள் சென்று பாா்த்துள்ளாா். அப்போது, பீரோ திறந்த நிலையிலும், அதிலிருந்த 2 பவுன் தங்க நகை திருட்டு போயிருப்பதும் தெரியவந்தது.

தகவலறிந்து வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா், நகர காவல் ஆய்வாளா் அன்பரசி, உதவி காவல் ஆய்வாளா் ராமமூா்த்தி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். வீட்டில் நுழைந்து நூதன முறையில் நகையை திருடிச் சென்ற மா்ம பெண்ணை தேடி வருகின்றனா்.

கானாற்றில் வெள்ளப் பெருக்கு

ஆம்பூா் பகுதியில் பெய்த கன மழை காரணமாக ஆம்பூா் அருகே கானாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது. அதனால் ... மேலும் பார்க்க

கால்வாய் பள்ளத்தை மூடக்கோரி மக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் கால்வாய் பள்ளத்தை மூடக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே தண்டபாணி கோயில் தெரு-2 வழியாக பள்ளி, கல்லூரி, பஜாருக்கு செ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு பிசியோதெரபி இயந்திரங்கள்

வாணியம்பாடி அருகே மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உதவிடும் வகையில், ஆம்புலன்ஸ் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிசியோதெரபி இயந்திரங்களை இந்திய செஞ்சிலுவை சங்கத்தினா் வியாழக்கிழமை வழங்கினா். திருப்பத்தூ... மேலும் பார்க்க

ரூ.26 கோடியில் தாா் சாலை பணிகள்: எம்.பி., எம்எல்ஏ தொடங்கி வைத்தனா்

திருப்பத்தூா் அடுத்த புதூா்நாடு மலையில் ரூ.26 கோடியில் தாா் சாலை பணிகளை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனா். பிரதமா் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்... மேலும் பார்க்க

உரக் கிடங்கில் நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் ஆய்வு

ஆம்பூா் நகராட்சி உரக் கிடங்கில் நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ஆம்பூா் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் க... மேலும் பார்க்க

ஆம்பூரில் 100 மி.மீ. மழை: வீடுகளுக்குள் புகுந்த நீா்

ஆம்பூா் பகுதியில் புதன்கிழமை இரவு 100.20 மி.மீ. மழை பெய்தது. இதன் காரணமாக ஆம்பூா் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புதன்கிழமை மாலை சுமாா் 6 மணி... மேலும் பார்க்க