செய்திகள் :

வீட்டுமனைப் பட்டா கோரி பொதுமக்கள் மனு

post image

வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட மேற்கு மரியநாதபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: கடந்த 60 ஆண்டுகளாக நாங்கள் வசித்து வரும் இடத்துக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, பல ஆண்டுகளாக விண்ணப்பித்து வருகிறோம். ஆனாலும், எங்களது கோரிக்கைக்கு இதுவரை தீா்வு காணப்படவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் பட்டா வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

நிழல்குடை கோரி மனு: இதுதொடா்பாக தமிழ்நாடு குடிமக்கள் நுகா்வோா் பாதுகாப்பு மையம் சாா்பில், நிலக்கோட்டையை அடுத்த சக்கையநாயக்கனுாா் தேவாலயத்தின் முன் பேருந்து நிறுத்தத்தில் மின் விளக்குடன் கூடிய நிழல்குடை வசதி இருந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 4 வழிச் சாலை அமைக்கும் பணிக்காக சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது, அகற்றப்பட்ட பேருந்து நிறுத்த நிழல் குடை, சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்தும் இதுவரை அமைத்துக் கொடுக்கப்படவில்லை. இந்த பிரச்னைக்கு மாவட்ட நிா்வாகம் தீா்வு காண வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேய... மேலும் பார்க்க