செய்திகள் :

வீரர்களை பத்திரமாக அழைத்துவர உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

post image

சென்னை: வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவை அடுத்து, வீரர்களை விமானத்தில் அழைத்து வர தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தென்னிந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர்கள், கங்கா-காவேரி விரைவு ரயிலில் முன்பதிவு செய்திருந்த போதிலும் ஏ.சி. முன்பதிவு பெட்டியை வடமாநில கும்பமேளா பயணிகள் ஆக்கிரமித்ததால் கூட்ட நெரிசலில் விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில் ஏறமுடியாத நிலை ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் ஒரு வீரருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை திரும்ப முடியாமல் தவித்த தமிழக வீரர்கள் சென்னை திரும்ப உதவுமாறு 6 வீரர்கள் உள்பட 11 மாற்றுத்திறனாளி வீரர்கள் தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என சமூக வலைதளங்களில் விடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்தனர்.

கும்பமேளா நீரை யோகி ஆதித்யநாத் குடிப்பாரா? பிரசாந்த் பூஷண் சவால்!

இதனைத் தொடர்ந்து வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், வாரணாசியில் ரயில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களை விமானம் மூலம் சென்னை அழைத்து வர தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பகல் 1.30 மணிக்கு வாரணாசியில் இருந்து பெங்களூரு சென்று அங்கிருந்து இரவு 7.30 மணி விமானத்தில் சென்னை வரவுள்ளனர்.

தமிழக அரசுக்கு நன்றி

வாரணாசியில் ரயிலில் ஏற முடியாமல் தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்த தமிழக அரசுக்கு மாற்றுத்திறனாளி வீரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கு: 2 பேரை சுட்டு பிடித்த போலீசார்

கிருஷ்ணகிரியில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர். கிருஷ்ணகிரி மலைக்கு உறவினர்களுடன் சென்ற பெண்ணை 4 பேர் மிரட்டி ... மேலும் பார்க்க

கட்டுமான தொழிலாளி தற்கொலை: மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் கைது

ஏரியூா் அருகே கட்டுமான தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக இரண்டாவதாக சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களை போலீஸார் கைது செய்தனர்.தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே நெர... மேலும் பார்க்க

மூணாறு பேருந்து விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

கேரள மாநிலம், மூணாறு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த தனியார் கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பா... மேலும் பார்க்க

ஒசூர்-பெங்களூரு இரட்டை நகரங்களாக உருவெடுக்கும்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

ஒசூர்: ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் ஒசூர்-பெங்களூரு இரட்டை நகரங்களாக உருவெடுக்கும் என தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார். ஒசூரில் த... மேலும் பார்க்க

ஹிந்தியைத் திணிக்கும் மறைமுக முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை: அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிக்கும் மறைமுக முயற்சிதான் புதிய கல்விக் கொள்கை என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,"புதிய கல்விக் கொள்கையால் மாணவர்களின் இடைநிற்... மேலும் பார்க்க

கோபியில் நாளை சுதந்திரப் போராட்ட வீரர் லட்சுமண ஐயர் 109 ஆவது பிறந்தநாள் விழா!

ஈரோடு: இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், சமூக சேவகர் மற்றும் சாதிய பாகுபாடு எதிர்ப்பாளருமான கோபி லட்சுண ஐயர் 109 ஆவது பிறந்தநாள் விழா கோபியில் சனிக்கிழமை(பிப்.22) நடைபெற உள்ளது.கோபிச்செட்டிப்பாளையத்தி... மேலும் பார்க்க