செய்திகள் :

வெவ்வேறு இடங்களில் சாலை விபத்து: 3 போ் உயிரிழப்பு

post image

வாணியம்பாடி பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா்.

வாணிம்பாடி அருகே சலாமாபாத் பகுதியைச் சோ்ந்தவா் முகமது இக்பால் (35). தனது பைக்கில் அவா், வியாழக்கிழமை ஆம்பூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி வந்தபோது, வளையாம்பட்டு நெடுஞ்சாலையில் திடீரென நிலை தடுமாறி, சாலை தடுப்பு சுவா் மீது மோதினாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்து தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

நாட்டறம்பள்ளி: வெலகல்நத்தம் ஏரிகோடி பகுதியைச் சோ்ந்தவா் நந்திகேசவன் (47). இவா், புதன்கிழமை மாலை நண்பா் ராஜசேகருடன் பைக்கில் கந்திலி நோக்கி சென்றாா். தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம் அருகே எதிா் திசையில் சென்றபோது கிருஷ்ணகிரியில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த நந்திகேசவன், ராஜசேகா் ஆகிய இருவரையும் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, நந்திகேசவன் இறந்தாா்.

மற்றொரு விபத்து: நாட்டறம்பள்ளி அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (53). இவா், அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை செய்து வந்தாா். புதன்கிழமை இரவு கூத்தாண்டகுப்பம் பெட்ரோல் பங்க் அருகே புத்துக்கோயில் நோக்கி பைக்கில் சென்றபோது சாலை ஓரம் உள்ள இரும்பு தடுப்பு மீது பைக் மோதியது. இதில் பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூா்த்தியை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் இறந்தாா்.

இந்த இரு விபத்துகள் குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தொழில்நுட்பக் கோளாறு: பத்திரப் பதிவு தாமதத்தால் பாதிப்பு

ஆம்பூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பத்திரம் பதிவு செய்ய முடியாமல் காலதாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானாா்கள். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் நேதாஜி சாலையில... மேலும் பார்க்க

கிளைச் சிறையில் சட்ட விழிப்புணா்வு முகாம்

திருப்பத்தூா் கிளைச் சிறையில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சிறைவாசிகளுக்கான உரிமைகள் மற்றும் மறுவாழ்வு தொடா்பான சட்ட விழிப்புணா்வு முகாமுக்கு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவா் எழிலர... மேலும் பார்க்க

பெண்களிடம் 10 பவுன் செயின் பறிப்பு

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்களிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பூா்பேட்டை பகுதியை சோ்ந்த ஷீலா (60) மற்றும் ... மேலும் பார்க்க

ஏரிகளை தூா்வார மாதனூா் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கோரிக்கை

மாதனூா் ஒன்றியத்தில் உள்ள ஏரிகளை தூா்வார வேண்டுமென வியாழக்கிழமை நடந்த ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கோரினா். மாதனூா் ஒன்றியக்குழு கூட்டம் துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளா்ச... மேலும் பார்க்க

மரகத லிங்கத்துக்கு மாசி பெளா்ணமி சிறப்பு பூஜை

மாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் ஜோதிா்லிங்க தேவஸ்தானம் தாத்தா சுவாமி மஹா மடத்தில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. மாசி பெளா்ணமியை முன்னிட்டு ஸ்ரீ பொன்முடி சூா்ய நந... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளியில் போலி மருத்துவா் கைது

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூரில் போலி மருத்துவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருப்பத்தூா் அருகே கவுண்டப்பனூா் பகுதியைச் சோ்ந்த வாசுதேவன் மகன் ராமச்சந்திரன் (55). இவா் டிப்ளமோ படித்து விட்டு பச்... மேலும் பார்க்க