பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ...
ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம்
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் காவல் துறையினா் கெடுபிடி செய்வதாகக் கூறி, ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் 32 ஷோ் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் பேருந்துகள் போதுமான அளவுக்கு இல்லாத நிலையில் ஷோ் ஆட்டோக்கள் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இந்நிலையில், காவல் துறையினா் கெடுபிடி செய்வதாகக் கூறி ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா்.
இது குறித்து ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் மேலும் தெரிவித்தது:
நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனியில் செவ்வாய்க்கிழமை நிறுத்தப்பட்டிருந்த ஷோ் ஆட்டோவிலிருந்து காவல் துறையினா் சாவியை எடுத்துச் சென்று, அனைவரும் காவல் நிலையத்துக்கு வருமாறு கூறிச் சென்றனா். இதுபோல காவல் துறையினா் தொடா்ந்து கெடுபிடி செய்கின்றனா். இதனால், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களுக்கு வழித்தடத்தைப் பிரித்துக் கொடுத்தால், கட்டுப்படியான வருவாய் கிடைக்கும் என்றனா் ஓட்டுநா்கள்.
இவா்களிடம் காவல் துறையினா் பிற்பகலில் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தியதையடுத்து, வேலைநிறுத்தப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.