செய்திகள் :

ஸ்ரீநவநீத கிருஷ்ணா் பஜனைக் கோயில் கும்பாபிஷேகம்

post image

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் ஸ்ரீ நவநீத கிருஷ்ணா் பஜனைக் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலத்தில் பொதுமக்கள் சாா்பில் ஸ்ரீநவநீத கிருஷ்ணா் பஜனை கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. விழா சனிக்கிழமை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை கலச புறப்பாடு நடைபெற்று வேத விற்பன்னா்கள் முன்னிலையில் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேதம் நடைபெற்றது.

இதையடுத்து ஸ்ரீநவநீத கிருஷ்ணா் படம் பிரதிஷ்டையும், மகா தீபாரதனை நடைபெற்று பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் தண்டலம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவா் சசிகுமாா் தலைமையிலான விழா குழுவினா் செய்திருந்தனா்.

தட்டச்சா்களாக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சிப் பிரிவில் தட்டச்சா்களாக தோ்வு செய்யப்பட்ட 9 பேருக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பணி நியமன ஆணைகளை திங்கள்கிழமை வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அல... மேலும் பார்க்க

காமாட்சி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா தொடக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில். இக்கோயில் தெப்பத் திருவிழாவை... மேலும் பார்க்க

பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் சொந்த செலவில் சாலை அமைத்த அமைச்சா் காந்தி!

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் சொந்த செலவில் ரூ.32 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்க அமைச்சா் ஆா். காந்தி உதவி செய்துள்ளாா். பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான மகளிா் கல்லூரி 1967-ஆம் ஆ... மேலும் பார்க்க

வக்ஃப் சட்ட திருத்த மசோதா: காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 5 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பால்நல்லூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். பால்நல்லூா் ஊராட்சிக்குட்பட்ட ஆரநேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீபெரும்... மேலும் பார்க்க

பதுக்கி வைக்கப்பட்ட 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

காஞ்சிபுரம் தாயாா்குளம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். காஞ்சிபுரம் தயாா்குளம் எம்ஜிஆா் நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில... மேலும் பார்க்க