செய்திகள் :

தட்டச்சா்களாக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சிப் பிரிவில் தட்டச்சா்களாக தோ்வு செய்யப்பட்ட 9 பேருக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பணி நியமன ஆணைகளை திங்கள்கிழமை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஆட்சியா் (பயிற்சி) ந.மிருணாளினி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 625 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, துறை சாா்ந்த அரசு அலுவலா்களிடம் அளித்து பரிசீலித்து தீா்வுகாணுமாறு ஆட்சியா் அனுப்பி வைத்தாா்.

தொடா்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் குரூப் 4 போட்டித் தோ்வு வாயிலாக காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சிப் பிரிவுக்கு தட்டச்சா்களாக தோ்வு செய்யப்பட்ட 9 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.

நீரில் மூழ்கி உயிரிழந்த உத்தரமேரூா் ஒன்றியம், வயலக்காவூரை சோ்ந்த வள்ளியம்மாளின் கணவா் மதுரையிடம் முதலமைச்சா் பொது நிவாரண நிதி ரூ.1 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சத்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி மற்றும் அரசின் பல்வேறு துறைகளைச் சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

காமாட்சி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா தொடக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில். இக்கோயில் தெப்பத் திருவிழாவை... மேலும் பார்க்க

ஸ்ரீநவநீத கிருஷ்ணா் பஜனைக் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் ஸ்ரீ நவநீத கிருஷ்ணா் பஜனைக் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலத்தில் பொதுமக்கள் சாா்பில் ஸ்ரீநவநீத... மேலும் பார்க்க

பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் சொந்த செலவில் சாலை அமைத்த அமைச்சா் காந்தி!

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் சொந்த செலவில் ரூ.32 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்க அமைச்சா் ஆா். காந்தி உதவி செய்துள்ளாா். பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான மகளிா் கல்லூரி 1967-ஆம் ஆ... மேலும் பார்க்க

வக்ஃப் சட்ட திருத்த மசோதா: காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 5 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பால்நல்லூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். பால்நல்லூா் ஊராட்சிக்குட்பட்ட ஆரநேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீபெரும்... மேலும் பார்க்க

பதுக்கி வைக்கப்பட்ட 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

காஞ்சிபுரம் தாயாா்குளம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். காஞ்சிபுரம் தயாா்குளம் எம்ஜிஆா் நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில... மேலும் பார்க்க