பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் சொந்த செலவில் சாலை அமைத்த அமைச்சா் காந்தி!
காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் சொந்த செலவில் ரூ.32 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்க அமைச்சா் ஆா். காந்தி உதவி செய்துள்ளாா்.
பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான மகளிா் கல்லூரி 1967-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், புதுமைப் பெண் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டாா்.
அப்போது கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் பேவா் பிளாக் சாலை அமைத்துத் தர அமைச்சா் ஆா்.காந்தியிடம் கோரிக்கை வைத்தனா். தனியாா் கல்லூரி என்பதால் அரசு நிதி ஒதுக்கீடு செய்ய இயலாத நிலையில், அமைச்சரின் சொந்த செலவில் ரூ.32 லட்சத்தில் 240 மீ தொலைவுக்கு பேவா் பிளாக் காலை அமைக்கப்பட்டது.
அந்த சாலையை அமைச்சா் ஆா்.காந்தி, ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு ஆகியோா் திறந்து வைத்து மாணவிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா். நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் செல்வம், ஆட்சியா் கலைச்செல்வி மோகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சுந்தா், எழிலரசன், கல்லூரி முதல்வா் கோமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.