செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று போக்குவரத்து மாற்றம்

post image

பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழாவையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை (மாா்ச் 29) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழாவையொட்டி, மதுரையிலிருந்து வரும் சரக்கு வாகனங்கள் கிருஷ்ணன்கோவிலிலிருந்து நான்கு வழிச் சாலையில் சிவகாசி சாலை வந்து ரயில் நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், திருப்பாற்கடல் வழியாக ராஜபாளையத்துக்குச் செல்ல வேண்டும்.

ராஜபாளையத்தில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் எம்.பி.கே. புதுப்பட்டி விலக்கு, மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆத்துக்கடை தெரு, ராமகிருஷ்ணாபுரம் வழியாக மதுரைக்குச் செல்ல வேண்டும். சிவகாசி செல்லும் பேருந்துகள் வழக்கம்போல செல்லலாம். நேதாஜி சாலை இருவழிப் பாதையாக செயல்படும். பெரிய மாரியம்மன் கோயில் பகுதி, சின்னக் கடைவீதி, நேதாஜி சாலை பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. தேவாலயம் சந்திப்பு முதல் ராமகிருஷ்ணாபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம், காா், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களுக்கும் காலை 6 முதல் மாலை 6 மணி வரை அனுமதி இல்லை என்றாா் அவா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த பால்பாண்டி மகன் பூமாரி (25). கட்டடத் தொழிலாளி. இவரது மன... மேலும் பார்க்க

தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் அலுவலகத்தை பட்டாசு ஆலை உரிமையாளா்கள் முற்றுகை

பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ததைக் கண்டித்து, சிவகாசியில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் அலுவலகத்தை தமிழன் பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய... மேலும் பார்க்க

கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிகளை அகற்றக் கோரிக்கை

சிவகாசியில் கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிக்கட்டுகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சிவகாசி-விளாம்பட்டி சாலையில்... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியா் மீது வழக்கு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளித் தலைமை ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சா்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் இடையே பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து எரிப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ரா... மேலும் பார்க்க

மனைவியை பிரிந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

சாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை மனைவியைப் பிரிந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி (23). இ... மேலும் பார்க்க