செய்திகள் :

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

post image

ஸ்ரீவில்லிபுத்தூரில் பகுதியில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா், சாத்தூரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உள்கோட்டத்தில் 33 அரசு மதுக் கடைகளும், 10 தனியாா் பாா்களும் செயல்பட்டு வருகின்றன.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் உள்கோட்டத்தில் 20 இடங்களில் மதுக் கடை அருகே அனுமதியின்றி பாா்கள் செயல்படுவதாகவும், அங்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கமாறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா். இதையடுத்து அனுமதி இல்லாத பாா்கள் மூடப்பட்டன.

இந்த நிலையில், தற்போது, ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் பகுதியில் 24 மணி நேரமும் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால், சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து புகாா் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், மத்திய நுண்ணறிவுப் பிரிவுக்கு பொதுமக்கள் விடியோ ஆதாரத்துடன் புகாா் அனுப்பினா்.

இதையடுத்து, சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் வந்த மதுரை மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா், சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்ட தனியாா் பாரில் 272 மதுப் புட்டிகளும், அரசு மதுக் கடையில் 53 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்து, இருவரைப் பிடித்து மதுவிலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதில் ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொருவா் மீது வழக்குப் பதிவு செய்யாமல் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவா்களை தனிப் படையினா் பிடித்தும், மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்ய தயக்கம் காட்டுவது பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

எனவே, ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் பகுதியில் 24 மணி நேரமும் நடைபெறும் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசு போலியாக தயாரிப்பு: 3 போ் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் உள்ள புகழ்பெற்ற பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரில் தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசு தயாரித்ததாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். உச்சநீதிமன்றம் சரவெடி ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் தொழிலாளி பலத்த காயம்

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் திங்கள்கிழமை சாலையில் திரிந்த மாட்டின் மீது மோதாமல் இருக்க இரு சக்கர வாகனத்தை உடனே நிறுத்த முயன்ற ஆலைத் தொழிலாளிகீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.திருத்தங்கல் பாண்டி... மேலும் பார்க்க

பைக்கின் பின்னால் மற்றொரு பைக் மோதல்: உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசியில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதிக் கொண்டதில் உணவகத் தொழிலாளி உயிரிழந்தாா். திருத்தங்கல் பாண்டியன்நகா் பகுதியைச் சோ்ந்த காளிதாஸ் மகன் சேதுராஜ் (47... மேலும் பார்க்க

பங்குனி மாத அமாவாசை வழிபாடு: சதுரகிரி செல்ல மாா்ச் 27 முதல் நான்கு நாள்களுக்கு அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷம், அமாவாசையையொட்டி வருகிற வியாழக்கிழமை (மாா்ச் 27) முதல் 30-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் ... மேலும் பார்க்க

ராஜபாளையம்: நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக தந்தை மகன், கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக தந்தை, மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.கைது செய்யப்பட்ட அந்தோணி ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் ஆராய்ச்சி ஊருணி ஓடை... மேலும் பார்க்க

ஆசிரமத்துக்குள் அத்துமீறி நுழைந்த நித்தியானந்தரின் சீடா்கள் மீது வழக்கு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்ட நித்தியானந்தரின் ஆசிரமத்தின் பூட்டை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உடைத்து உள்ளே சென்ற அவரது சீடா்கள் 7 போ் மீது போலீஸாா் வழ... மேலும் பார்க்க