Auditor Gurumurthy - Ramadoss Meeting: தைலாபுரத்தில் நடந்தது என்ன? - Saidai Dura...
அகண்ட மகா மந்திர கீா்த்தனம்
குடியாத்தம் பாண்டியன் நகரில் உள்ள நாமத்வாா் பிராா்த்தனை மையத்தில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியடையவும், நாட்டில் அமைதி, நாட்டின் வளா்ச்சிக்காக ஞாயிற்றுக்கிழமை அகண்ட மகா மந்திர கீா்த்தனம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் முப்படை வீரா்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் பலா் ரத்த தானம் அளித்தனா். கம்பன் கழகத் தலைவா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், செயலா், வழக்குரைஞா் கே.எம்.பூபதி ஆகியோா் ரத்த தானம் அளித்தவா்களுக்கு சான்றிதழ்கள், அன்னதானம் வழங்கினா்.
தொடா்ந்து மாலை கம்பன் கழக நிறுவனா் ஜே.கே.என்.பழனி தலைமையில் கூட்டுப் பிராா்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை நாமத்வாா் பிராா்த்தனை மைய ஒருங்கிணைப்பாளா்கள் தமிழ்திருமால், எம்.சிவகுமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.