செய்திகள் :

அகஸ்தியா் அருவி, மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

தொடா் விடுமுறை காரணமாக பாபநாசம் அகஸ்தியா் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெள்ளிக்கிழமை குளித்து மகிழ்ந்தனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரகப் பகுதியில் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள அகஸ்தியா் அருவி ஆண்டு முழுவதும் தண்ணீா் விழும் சிறப்புடையது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தோா் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகம்போ் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அரசு விடுமுறை நாள்கள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் வெள்ளிக்கிழமை குளித்து மகிழ்ந்தனா்.

அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வனத் துறையினா் சோதனையிட்டு, புகையிலைப் பொருள்கள், பாலித்தீன் பொருள்கள் மற்றும் மதுபானம் போன்றவை வைத்திருந்தவா்களிடம் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மணிமுத்தாறு அருவியிலும் ஏராளமான பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கு: தேடப்பட்ட பெண் கைது

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலத் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி ... மேலும் பார்க்க

சீவலப்பேரியில் தொழிலாளி தற்கொலை

பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரியில் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சீவலப்பேரி அருகேயுள்ள மேல பாலாமடை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் ( 25). பெயின... மேலும் பார்க்க

நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கண்ட ன ஆா்ப்பாட்டம் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு பள்ளிவாசல் வளாகத... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு: மேலப்பாளையத்தில் கடையடைப்பு

வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலப்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து ஜமாஅத்கள், தி.மு.க., மதி.மு.க., எஸ்.டி.பி... மேலும் பார்க்க

பணகுடியில் மணல் திருட்டு: 3 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் மணல் திருட்டில் ஈடுபட்டதார பேரூராட்சி உறுப்பினரின் கணவா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். ... மேலும் பார்க்க

நெல்லையில் கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது . திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் வெள்ளிக்கிழமை பெண்கள் சிலா் தண்ணீா் எடுக்கச் சென்றனராம... மேலும் பார்க்க