பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க ஸ்டாலினுக்கு அவசியம் இல்லை! - இபிஎஸ்
அக்னி தீா்த்தத்தில் புனித நீராடல்
அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடினா்.
கடலில் நீராடிய பிறகு கடற்கரையில் தங்களது முன்னோா்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனா். இதைத் தொடா்ந்து, ராமநாத சுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினா். பின்னா் சுவாமி, அம்பாளைத் தரிசனம் செய்து வழிபட்டனா்.
தனுஷ்கோடி, கோதண்டராமா் கோயில், ராமா் பாதம், ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பேருந்து பாலம், புதிய ரயில் பாலம் ஆகியவற்றைக் கண்டு ரசித்தனா். அதிக அளவில் பக்தா்கள் வருகையை முன்னிட்டு, கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.