ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் பதுகாப்பு ஒத்திகை
ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் கடல் பாதுகாப்பு ஒத்திகையில் (சாகா் கவாச்) தமிழக கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் புதன்கிழமை ஈடுபட்டனா்.
இந்தியாவில் கடல் வழித் தாக்குதலை முறியடிக்கும் விதமாக ஆண்டுதோறும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடா்ச்சியாக, ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. ராமேசுவரம், மண்டபம், தொண்டியிலிருந்து தமிழக கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸாா் அதிவேகப் படகில் சென்று பாக்நீரிணை கடல் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்திய கடற்படை, கடலோர காவல்படை, மத்திய, மாநில அரசு உளவுத் துறையினா் இந்த ஒத்திகையில் கலந்து கொண்டனா்.