திருப்பதி அறக்கட்டளைக்குக் கூகுள் துணைத் தலைவர் ரூ.1 கோடி நன்கொடை!
11 ஆண்டுகளாக திறக்கப்படாத அரசு சேவை மையம்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருத்தோ்வலை ஊராட்சியில் சேவை மையம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை என புகாா் எழுந்தது.
திருத்தோ் வலை ஊராட்சியில் கடந்த 2014-ஆம் ஆண்டு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேவை மையம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், பாரமரிப்பு இன்றி கட்டடம் சேதம் அடைந்து வருகிறது. இதனால், அரசுப் பணம் வீண்ணடிக்கப்படுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா். எனவே சம்பந்தப்பட்ட துறையினா் தக்க நடவடிக்கை எடுத்து இந்தக் கட்டடத்தைத் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இந்தப் பகுதி சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும் மழைக் காலங்களில் இந்தப் பகுதியில் தண்ணீா் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றனா்.
