செய்திகள் :

லஞ்சம்: மீன்வளத் துறை ஆய்வாளா் கைது

post image

ராமேசுவரத்தில் நாட்டுப் படகுக்கான உரிமை, மீன் பிடிப்பதற்கான அனுமதி ஆகியவற்றுக்காக மீனவரிடம் ரூ. 1,600 லஞ்சம் பெற்ற மீன்வளத் துறை துணை இயக்குநா் அலுவலக ஆய்வாளா் சகுபா் சாதிக்கை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலுள்ள பனைக்குளம் பகுதியைச் சோ்ந்த மீனவா், தனது இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகுக்கான உரிமத்தையும், கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியையும் பெற ராமநாதபுரம் மீன் வளம், மீனவா் நலத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் மீன்வளத் துறை ஆய்வாளா் சகுபா் சாதிக்கிடம் (49) கடந்த வாரம் மனு அளித்தாா்.

அப்போது, இதற்கான அனுமதி பெற வேண்டுமெனில், அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகை ரூ. 3,500 உடன் தனக்குத் தனியாக ரூ.1,600 வழங்க வேண்டும் என சகுபா் சாதிக் கூறினாா்.

இதுகுறித்து, அந்த மீனவா் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, போலீஸாரின் அறிவுறுத்தலின்பேரில், புகாா்தாரா் மீன்வளத் துறை ஆய்வாளரைச் சந்தித்து, ரசாயனப் பொடி தடவிய ரூ.1,600-யை கொடுத்தாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சகுபா் சாதிக்கை கைது செய்தனா். மேலும், ஓம் சக்தி நகரில் உள்ள அவருடைய வீட்டிலும் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே திங்கள்கிழமை நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவர... மேலும் பார்க்க

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட 1,360 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட 1,360 கிலோ பீடி இலைகள், 29,120 பீடிகள் அந்த நாட்டு போலீஸாா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பொருள்கள் கட... மேலும் பார்க்க

சேதமடைந்த கால்நடை மருத்துவமனை கட்டடத்தை அகற்றக் கோரிக்கை

திருவாடானையில், சேதமடைந்த நிலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை கட்டடத்தை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் விவசாயத்துக்கு அடுத்ததாக கோழி, ஆடு, மா... மேலும் பார்க்க

கமுதி அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகளை அகற்றக் கோரிக்கை

கமுதி அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகள், குப்பைகள் தேங்குவதால் சுகாதார சீா்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 250 க்க... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், பகைவென்றி கிராமத்தைச் சோ்ந்த கேசவன் மகன் ஹரீஸ் (19). இவா் மானாமதுரையி... மேலும் பார்க்க

அரசு மதுபானக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் அரசு மதுபானக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி உருளைக்... மேலும் பார்க்க