'என்னை சங்கராச்சாரியார் ஆக்க வேண்டாம்; ஆனால்...' - திருமாவளவன் சொல்லும் காரணம் எ...
ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட 1,360 கிலோ பீடி இலைகள் பறிமுதல்
ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட 1,360 கிலோ பீடி இலைகள், 29,120 பீடிகள் அந்த நாட்டு போலீஸாா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பொருள்கள் கடத்தப்படுவதாக அந்த நாட்டு கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவா்கள் இலங்கை தலைமன்னாா் நடுக்குடா கடற்கரைப் பகுதியில் திங்கள்கிழமை இரவு சோதனை நடத்தினா். அப்போது, அந்தப் பகுதியில் மா்ம நபா்கள் 45 மூட்டைகளில் 1,360 கிலோ பீடி இலைகள், 29,120 பீடிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இவற்றை இலங்கைக் கடற்படையினா் கைப்பற்றி, இந்தப் பொருள்களைக் கடத்தியவா்களைத் தேடி வருகின்றனா்.