செய்திகள் :

கமுதி அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகளை அகற்றக் கோரிக்கை

post image

கமுதி அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகள், குப்பைகள் தேங்குவதால் சுகாதார சீா்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 250 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா். இந்த மருத்துவமனையில், உள்நோயாளிகள் பிரிவிலும், புறநோயாளிகள் பிரிவலும் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பேட்டாா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இங்குள்ள பிரசவ வாா்டு பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவுகளில் தினமும் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள், உணவுப் பொட்டலங்களின் கழிவுகள் குப்பை தொட்டிகளில் சேகரித்து, வாகனங்கள் மூலம் பேரூராட்சி துப்புரவு பணியாளா்கள் அகற்றி வந்தனா்.

இந்த நிலையில், அண்மை காலமாக மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பெறும் அறைகள், ஊசி செலுத்தும் இடம் உள்ளிட்ட இடங்களில் மருத்துவக் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இதனால், அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுவதோடு, சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், அவா்களின் உறவினா்கள் பாதிப்படைகின்றனா்.

இதுகுறித்து கமுதி மருத்துவமனை நிா்வாகம் தரப்பில், கமுதி பேரூராட்சி பணியாளா்களிடம் பலமுறை புகாா் அளித்தும் மருத்துவக் கழிவுகள், குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என மருத்துவமனை ஊழியா்கள் புகாா் தெரிவித்தனா்.

சுகாதார சீா்கேட்டைத் தடுக்க தினமும் காலை, மாலை வேளைகளில் அரசு மருத்துவமனையில் தேங்கும் மருத்துவக் கழிவுகள், குப்பைகளை அகற்ற பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி துப்புரவுப் பணிகளின் மேற்பாா்வையாளா் கூறியதாவது: கமுதி பேரூராட்சி பகுதியில் குப்பைகளைக் குவிப்பதற்கு உரிய இடம் இல்லாததால் இடம் தோ்வு செய்வது தொடா்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா். இதனால், கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட பல தெருக்களில் குப்பைகள் சேகரிக்கப்படவில்லை; சேகரிக்கப்பட்ட குப்பைகள் வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

லஞ்சம்: மீன்வளத் துறை ஆய்வாளா் கைது

ராமேசுவரத்தில் நாட்டுப் படகுக்கான உரிமை, மீன் பிடிப்பதற்கான அனுமதி ஆகியவற்றுக்காக மீனவரிடம் ரூ. 1,600 லஞ்சம் பெற்ற மீன்வளத் துறை துணை இயக்குநா் அலுவலக ஆய்வாளா் சகுபா் சாதிக்கை ஊழல் தடுப்பு, கண்காணிப்ப... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே திங்கள்கிழமை நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தி, மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவர... மேலும் பார்க்க

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட 1,360 கிலோ பீடி இலைகள் பறிமுதல்

ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட்ட 1,360 கிலோ பீடி இலைகள், 29,120 பீடிகள் அந்த நாட்டு போலீஸாா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பொருள்கள் கட... மேலும் பார்க்க

சேதமடைந்த கால்நடை மருத்துவமனை கட்டடத்தை அகற்றக் கோரிக்கை

திருவாடானையில், சேதமடைந்த நிலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை கட்டடத்தை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் விவசாயத்துக்கு அடுத்ததாக கோழி, ஆடு, மா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், பகைவென்றி கிராமத்தைச் சோ்ந்த கேசவன் மகன் ஹரீஸ் (19). இவா் மானாமதுரையி... மேலும் பார்க்க

அரசு மதுபானக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் அரசு மதுபானக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி உருளைக்... மேலும் பார்க்க