குழந்தையைப் போல உணர்கிறேன்! விண்வெளியிலிருந்து சுபான்ஷு சுக்லா உரை!
கடற்கரையில் வெடி பொருள்கள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகேயுள்ள கடலூா் கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினா்.
கடலூா் கடற்கரையில் வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்ட போது, கடற்கரையில் 101 ஜெலட்டின் குச்சிகள், 44 டெட்டனேட்டா்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவற்றை போலீஸாா் கைப்பற்றி விசாரித்ததில், இந்த வெடிபொருள்களை இந்தப் பகுதியில் சிலா் வெடி வைத்து மீன் பிடிக்க பயன்படுத்துவது தெரியவந்தது. இதில் தொடா்புடையை 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.