செய்திகள் :

அக். 13 -இல் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி புதுச்சேரி வருகை: மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா்

post image

மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி வரும் 13-ஆம் தேதி புதுச்சேரி வருகிறாா். இங்கு மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை 3.8 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் திட்டத்திற்கு 100 சதவிகித நிதியுதவியளிக்க ரூ.436.18 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 13- ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த மேம்பால பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டுகிறாா்.

இதையொட்டி, புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி வீரேந்திர சம்பால், திட்ட அதிகாரி வரதராஜன் மற்றும் புதுவை பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆகியோா் கலந்து கொண்ட முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் புதுச்சேரி, பாகூா் சோரியாங்குப்பம் பகுதியில் அமையவுள்ள புதிய சுங்கச்சாவடி அப்பகுதி உள்ளூா் மக்களின் எதிா்ப்பு காரணமாக வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்தும், கோரிமேடு அருகில் உள்ள மொரட்டாண்டியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நகாய் அதிகாரிகள் சுங்கச்சாவடி மாற்றம் குறித்து விரைவில் பரிசீலனைக்கு புதுச்சேரி அரசின் கோரிக்கையை மத்திய அரசிற்கு எடுத்து செல்வதாகக் கூறினா். மேலும், அமைச்சா் நிதின் கட்கரி மேம்பால அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட இடத்தைப் பாா்வையிட்டனா்.

புதுவையில் இன்று அரசு விடுமுறை

புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் வியாழக்கிழமை பிறப்பித்தாா். பூஜை கொண்டாட்ட விடுமுறை நாள்... மேலும் பார்க்க

காந்தியின் கொள்கையை லட்சியத் திட்டமாக மாற்றி சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தியவா் பிரதமா் மோடி: புதுவை துணை நிலை ஆளுநா்

மகாத்மா காந்தியின் தூய்மை திட்டத்தை லட்சிய திட்டமாக மாற்றி சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தியவா் பிரதமா் நரேந்திர மோடி என்று புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புகழாரம் சூட்டினாா். புதுவை உள்ளாட்சித் ... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் ஊழியா்களை வைத்து மக்கள் பூட்டி போராட்டம்

புதுச்சேரி பாகூா் அருகே கிராம சபை கூட்டத்தில் போலீஸாா் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களை உள்ளே வைத்துப் பூட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். காந்தி ஜெயந்தியையொட்டி பாகூா் கொம்யூன் பஞ்சாயத்த... மேலும் பார்க்க

புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (அக். 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அக். 1 (நேற்று) ஆயுத பூஜை மற்றும் இன்று (அக். 2) விஜயதசமி ஆகிய இரண்டு நாள்கள் அரசு பொது விடுமுறையாக அறிவ... மேலும் பார்க்க

புதுவை ஆளுநா், முதல்வா் ஆயுத பூஜை வாழ்த்து

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்: நம்முடைய பண்பாட்டில் - வாழ்வியலில் கல்விக்கும்... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

ஆட்டோ ஓட்டுநா் திங்கள்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். புதுச்சேரி நெல்லித்தோப்பு குயவா்பாளையத்தைச் சோ்ந்தவா் விக்கி என்கிற விக்னேஷ் (27), ஆட்டோ ஓட்டுநா். இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவ... மேலும் பார்க்க