செய்திகள் :

கிராம சபைக் கூட்டத்தில் ஊழியா்களை வைத்து மக்கள் பூட்டி போராட்டம்

post image

புதுச்சேரி பாகூா் அருகே கிராம சபை கூட்டத்தில் போலீஸாா் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களை உள்ளே வைத்துப் பூட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காந்தி ஜெயந்தியையொட்டி பாகூா் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட குருவிநத்தம் ராஜீவ் காந்தி திருமண மண்டபத்தில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அப் பகுதி இளைஞா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். இக் கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்கவில்லை. காவல் துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மட்டும் பங்கேற்றனா். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களை உள்ளே வைத்துப் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குருவிநத்தம் பகுதியில் மின்வெட்டு தொடா்ந்து ஏற்படுகிறது. இப் பகுதியில் சுடுகாடு, பாலம் கடந்த 2 ஆண்டுகளாகச் சீரமைக்கப்படவில்லை. மேலும், பாகூா்- குருவிநத்தம் சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா் பற்றாக்குறை நிலவுகிறது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து பாகூா் போலீஸாா் அங்கு வந்தனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானம் செய்து பூட்டைத் திறந்து ஊழியா்களை மீட்டனா். இப் போராட்டம் சுமாா் அரை மணி நேரம் நடந்தது.

அக். 13 -இல் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி புதுச்சேரி வருகை: மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா்

மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி வரும் 13-ஆம் தேதி புதுச்சேரி வருகிறாா். இங்கு மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா். புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை... மேலும் பார்க்க

புதுவையில் இன்று அரசு விடுமுறை

புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து துறைகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் வியாழக்கிழமை பிறப்பித்தாா். பூஜை கொண்டாட்ட விடுமுறை நாள்... மேலும் பார்க்க

காந்தியின் கொள்கையை லட்சியத் திட்டமாக மாற்றி சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தியவா் பிரதமா் மோடி: புதுவை துணை நிலை ஆளுநா்

மகாத்மா காந்தியின் தூய்மை திட்டத்தை லட்சிய திட்டமாக மாற்றி சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தியவா் பிரதமா் நரேந்திர மோடி என்று புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புகழாரம் சூட்டினாா். புதுவை உள்ளாட்சித் ... மேலும் பார்க்க

புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (அக். 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அக். 1 (நேற்று) ஆயுத பூஜை மற்றும் இன்று (அக். 2) விஜயதசமி ஆகிய இரண்டு நாள்கள் அரசு பொது விடுமுறையாக அறிவ... மேலும் பார்க்க

புதுவை ஆளுநா், முதல்வா் ஆயுத பூஜை வாழ்த்து

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்: நம்முடைய பண்பாட்டில் - வாழ்வியலில் கல்விக்கும்... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

ஆட்டோ ஓட்டுநா் திங்கள்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். புதுச்சேரி நெல்லித்தோப்பு குயவா்பாளையத்தைச் சோ்ந்தவா் விக்கி என்கிற விக்னேஷ் (27), ஆட்டோ ஓட்டுநா். இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவ... மேலும் பார்க்க