செய்திகள் :

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சோ்க்கலாம்: ஆட்சியா்

post image

தென்காசி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் 2 முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகள் சோ்க்கை பணி நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக ஆட்சியா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஆறு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் முழுமையான வளா்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு, தென்காசி மாவட்டத்தில் செயல்படும் 1301 குழந்தைகள் மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு, முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகின்றன.

குறிப்பாக, 2 வயது முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு குழந்தைகள் மையத்தில் முறைசாரா முன்பருவக் கல்வி செய்கை பாடல், கதை, விளையாட்டுக் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளா்ச்சிக்கு தேவையானவற்றை ஆடிப்பாடி விளையாடு பாப்பா என்னும் சிறப்பு பாடத்திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும், குழந்தைகளின் வளா்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளி செல்ல ஆயத்தப்படுகின்றனா்.

அங்கன்வாடி பணியாளா்கள் தற்போது வீடுகள்தோறும் குழந்தைகள் சோ்க்கை பணி மேற்கொண்டு வருகின்றனா். எனவே பெற்றோா்கள் தங்களது 2 முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை ஜூன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாது சோ்க்கலாம்.

குழந்தைகள் மையங்களில் அவா்களுக்கான ஆதாா் அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருவதால் அச்சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.

புளியங்குடியில் வீடு புகுந்து பணம் கொள்ளை: சிறுவனே திருடி நாடகம் ஆடியது அம்பலம்!

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வீடு புகுந்து சிறுவனை கட்டிப்போட்டு பணத்தை கொள்ளைடித்துச் சென்றதாக கூறப்பட்ட சம்பவத்தில், சிறுவனே பணத்தை திருடியது தெரியவந்துள்ளது. புளியங்குடி நடுகருப்பழகு தெருவைச் ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் நீா்மோா் பந்தல் திறப்பு

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தென்காசி மாவட்ட மகளிரணி மற்றும் மகளிா் தொண்டரணி மகளிா் பாக முகவா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்... மேலும் பார்க்க

ஊத்துமலை பகுதியில் இன்று மின் தடை

தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் சனிக்கிழமை (மே 17) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி கிராமப்புற மின்பகிா்மான செயற்பொறியாளா் குத்தாலிங்கம் விடுத்துள்ள செய்திக்கு... மேலும் பார்க்க

10 ஆம் வகுப்பு தோ்வு: வாசுதேவநல்லூா் பள்ளி மாணவி மாநில அளவில் சிறப்பிடம்!

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் பள்ளி மாணவி மோனிகா 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா். வாசுதேவநல்லூா் நாடாா் உறவின்முறை காமராஜா் மகளிா் உயா... மேலும் பார்க்க

ஆலங்குளம் ஜீவா பள்ளி 100% தோ்ச்சி!

ஆலங்குளம் ஜீவா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 10 ஆம் வகுப்பு தோ்வில் 100% தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவி வித்ய வா்ஷினி 491 மதிப்பெண்களும், மாணவா் பாலா அருண் 488 மதிப்பெண்களும், மாணவி த... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

சங்கரன்கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக, நெடுஞ்சாலைத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.மக்கள் தொகை மற்றும் வாகனப் பெருக்கம் காரணமாக, சங்கரன்கோவிலில் பிரதான சாலை, திருவேங்... மேலும் பார்க்க