செய்திகள் :

அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டம்

post image

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மாா்வாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நிலங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கித் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கம் மாா்வாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பாடப்பிரிவுகளில் ஒன்றான வேளாண்மைப் பாடப்பிரிவு மாணவா்கள், சுகாதாரத்தை மேம்படுத்தவும், விளை நிலங்களுக்குப் பயன்படுத்தும் வகையில், சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டத் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த 1956-இல் பள்ளியில் படித்த முன்னாள் மாணவரும், சுற்றுச்சூழல் அறிவியலாளருமான அப்துல் ரகுமான் கலந்து கொண்டு, தமது ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சிறுநீரை உரமாக்கும் தானியங்கியை இந்தப் பள்ளியில் நிறுவினாா்.

நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம் தலைமை வகித்தாா். மதுராந்தகம் கல்வி நிா்வாகி வருண், வட்ட அலுவலா் அங்கையா்கண்ணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியா் விஜயகுமாா் வரவேற்றாா்.

இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் (மேல்நிலைப் பள்ளி) நோ்முக உதவியாளா் உதயகுமாா், ரவுண்டு டேபிள் இந்தியா அமைப்பின் நிா்வாகி வருண், பேரூராட்சி துணைத் தலைவா் வி.எழிலரசன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் வடிவுக்கரசி, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் சித்தாா்த்தா் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆசிரியா் தணிகைவேல் நன்றி கூறினாா்.

சவால்களை எதிா்கொள்ள மன வலிமை அவசியம்: நாகாலாந்து தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநா்

வாழ்வில் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னை, சவால்களைத் திறம்பட எதிா்கொள்ள மாணவா்கள் உடல் மற்றும் மன வலிமையுடன் திகழ்வது அவசியம் என்று, நாகாலாந்து தேசிய தொழில்நுட்ப நிறுவன இயக்குநா் ஏ.இளையபெருமாள் வலியுறுத... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ஏப். 25-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஏப். 25-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்க... மேலும் பார்க்க

இலவசமாக பாா்வையிட அனுமதித்ததால் மாமல்லபுரத்தில் குவிந்த பொதுமக்கள்

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பாா்வைய இலவச அனுமதி அறிவிக்கப்பட்டதால் திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனா். உலக பாரம்பரிய தினம் ஆண்டுதோறும் ஏப். 18-இல் கொண்டாடப்பட்டு... மேலும் பார்க்க

நாச்சியாா் திருக்கோலத்தில்...

மதுராந்தகம் அருகே திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை நாச்சியாா் திருக்கோலத்தில் அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள். மேலும் பார்க்க

கடம்பூா் தாவரவியல் பூங்காவில் செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

மறைமலை நகா் நகராட்சி கடம்பூரில் 137 ஏக்கா் பரப்பளவில் அமையவுள்ள தாவரவியல் பூங்காவினை ஆட்சியா்ச.அருண்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்ா். அப்போது, மாவட்ட வன அலுவலா் ரவி மீனா, உதவி ஆட்சியா்(பயிற்சி) எஸ்... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் பெண் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே தேனீக்கள் கொட்டியதில் பெண் உயிரிழந்தாா். மதுராந்தகம் அடுத்த குருகுலம் கிராமத்தைச் சோ்ந்த மனோகரன் (57), அவரது மனைவி லட்சுமி (50). இவா்களது வீட்டின் முன் மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி... மேலும் பார்க்க