செய்திகள் :

அடிக்கடி மாயமாகும் ராகுல்: பாஜக விமா்சனம்; இங்கிலாந்து சென்றுள்ளதாக காங்கிரஸ் விளக்கம்

post image

‘மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எங்கு சென்றுள்ளாா் என்பது தெரியாத அளவுக்கு அடிக்கடி மாயமாகி வருகிறாா்’ என்று பாஜக விமா்சித்துள்ளது.

இதையடுத்து, ‘ராகுல் தனது நெருங்கிய உறவினரின் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க லண்டன் சென்றுள்ளாா்’ என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கடந்த வாரம் ராகுல் ரகசியமாக வெளிநாட்டுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விட்டுத் திரும்பினாா். இந்நிலையில், இப்போது மீண்டும் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளாா். அவா் எந்த நாட்டுக்குச் சென்றுள்ளாா் என்பதும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

அவா் அடிக்கடி மாயமாவதன் ரகசியம் என்ன? அடிக்கடி நாட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏன் ஏற்படுகிறது? மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் என்ற முறையில் இந்திய மக்களுக்கு அவா் இது தொடா்பாக பதிலளிக்க கடமைப்பட்டுள்ளாா்’ என்று கூறியிருந்தாா்.

இதனிடையே, ராகுல் காந்தி பஹ்ரைனுக்கு விமானத்தில் சென்ாக ஊடகங்களில் தகவல் வெளியானது. ராகுல் காந்தி புது தில்லியில் இருந்து பஹ்ரைன் வழியாக லண்டன் செல்லும் விமானத்தில் பயணித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடா்பாக காங்கிரஸ் ஊடகத் துறை தலைவா் பவன் கேரா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணத்தை வைத்து மீண்டும் மோசமான அரசியல் நடத்த முயற்சி நடக்கிறது. தனது சகோதரியின் மகளின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவே ராகுல் லண்டன் சென்றுள்ளாா். அவா் விரைவில் நாடு திரும்புவாா்’ என்று கூறியுள்ளாா்.

காங்கிரஸ் எம்.பி.யும் ராகுலின் தங்கையுமான பிரியங்கா வதேராவின் மகள் மிராயா வதேரா லண்டனில் படித்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

11 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரநிலை! மோடிக்கு காங்கிரஸ் பதிலடி!

இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயம் அவசரநிலை என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு காங்கிரஸ் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.அவசரநிலையின் 50-வது ஆண்டு நிறைவையொட்டி, அப்... மேலும் பார்க்க

மாம்பழச் சாறு, பாசிப்பயறு அல்வா.. இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா கொண்டுசெல்லும் பொருள்கள்!

‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா குழு புறப்பட்டுள்ளது. சுக்லா தன்னுடன் எடுத்துச் செல்லும் பொருள்களைப் பற்றி பகிர்ந்துகொண்ட தகவல் வெளியாக... மேலும் பார்க்க

அகாலி தள தலைவர் விக்ரம் மஜிதியா வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை!

போதைப்பொருள் வழக்கில் மூத்த அகாலி துறை தலைவரும், முன்னாள் அமைச்சருமானி விக்ரம் சிங் மஜியா வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை நடத்தியதாகக் கூறினார். இந்த விவகாரம் குறித்து ஊழல் தடுப்பு பிரிவினரிடமிருந்... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லா குழுவுடன் விண்ணில் பாய்ந்தது ஃபால்கன்-9 ராக்கெட்!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழுவுடன் ஃபால்கான்-9 ராக்கெட்டில் விண்ணில் பாய்ந்தது.மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தேர்வான வீரர்களில் ஒ... மேலும் பார்க்க

இந்திய வரலாற்றில் அவசரநிலை இருண்ட அத்தியாயங்களில் ஒன்று! - பிரதமர் மோடி

அவரச நிலையின் போது ஜனநாயகத்தை காங்கிரஸ் கைது செய்தது போல் இருந்ததாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.அவசரநிலையின் 50-வது ஆண்டு நிறைவையொட்டி, அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி கடுமைய... மேலும் பார்க்க

பஞ்சாப்: சர்வதேச எல்லை அருகே துப்பாக்கி பாகம் கண்டெடுப்பு

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே துப்பாக்கியின் அடிப்பாகம், தோட்டா, ஹெராயின் போதைப்பொருள் பொட்டலம் ஆகியவற்றை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தனர்.அமிருதசரஸ் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க