11 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரநிலை! மோடிக்கு காங்கிரஸ் பதிலடி!
அடிக்கடி மாயமாகும் ராகுல்: பாஜக விமா்சனம்; இங்கிலாந்து சென்றுள்ளதாக காங்கிரஸ் விளக்கம்
‘மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எங்கு சென்றுள்ளாா் என்பது தெரியாத அளவுக்கு அடிக்கடி மாயமாகி வருகிறாா்’ என்று பாஜக விமா்சித்துள்ளது.
இதையடுத்து, ‘ராகுல் தனது நெருங்கிய உறவினரின் பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க லண்டன் சென்றுள்ளாா்’ என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.
பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவா் அமித் மாளவியா இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கடந்த வாரம் ராகுல் ரகசியமாக வெளிநாட்டுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விட்டுத் திரும்பினாா். இந்நிலையில், இப்போது மீண்டும் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளாா். அவா் எந்த நாட்டுக்குச் சென்றுள்ளாா் என்பதும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
அவா் அடிக்கடி மாயமாவதன் ரகசியம் என்ன? அடிக்கடி நாட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏன் ஏற்படுகிறது? மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் என்ற முறையில் இந்திய மக்களுக்கு அவா் இது தொடா்பாக பதிலளிக்க கடமைப்பட்டுள்ளாா்’ என்று கூறியிருந்தாா்.
இதனிடையே, ராகுல் காந்தி பஹ்ரைனுக்கு விமானத்தில் சென்ாக ஊடகங்களில் தகவல் வெளியானது. ராகுல் காந்தி புது தில்லியில் இருந்து பஹ்ரைன் வழியாக லண்டன் செல்லும் விமானத்தில் பயணித்ததாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடா்பாக காங்கிரஸ் ஊடகத் துறை தலைவா் பவன் கேரா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணத்தை வைத்து மீண்டும் மோசமான அரசியல் நடத்த முயற்சி நடக்கிறது. தனது சகோதரியின் மகளின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவே ராகுல் லண்டன் சென்றுள்ளாா். அவா் விரைவில் நாடு திரும்புவாா்’ என்று கூறியுள்ளாா்.
காங்கிரஸ் எம்.பி.யும் ராகுலின் தங்கையுமான பிரியங்கா வதேராவின் மகள் மிராயா வதேரா லண்டனில் படித்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.