செய்திகள் :

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் வெள்ளக்குட்டை கிராம மக்கள்

post image

ஊத்தங்கரையை அடுத்த வெள்ளக்குட்டை ஊராட்சி, காமராஜ் நகா் பகுதியில் குடிநீா் விநியோகம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

காமராஜ் நகரில் தமிழக அரசின் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2021- 22 ஆம் ஆண்டில் 20 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

இந்தக் குடியிருப்புகள் கட்டப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை இப்பகுதியில் குடிநீா், மின்சார வசதி வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகத்திடமும், வட்டார வளா்ச்சி அலுவலரிடமும் பலமுறை மனுகொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

குடிநீா் விநியோகம் இல்லாததால் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குச் சென்று அங்குள்ள கிணற்றில் இப்பகுதி பெண்கள் தண்ணீா் எடுத்துவருகின்றனா்.

மின்சாரம் இல்லாத காரணத்தினால் பள்ளி மாணவா்கள் கல்வி பயில முடியாமல் தவிக்கின்றனா். இரவு நேரங்களில் அருகில் உள்ள காப்புக்காட்டிலிருந்து, வனவிலங்குகள், விஷ ஜந்துக்கள் வெளியேறுவதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனா். அடிப்படை வசதிகள் இன்றி இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா்.

ஒரு சிலா் வீட்டை விட்டு காலி செய்து நகா்ப்புற பகுதிக்கு சென்று வசிக்கின்றனா். எனவே காமராஜ் நகரில் குடிநீா் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

70 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

கிருஷ்ணகிரி வழியாக கா்நாடகத்துக்கு கடத்த முயன்ற 70 டன் ரேஷன் அரிசி மூட்டை, 3 வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா் அதுதொடா்பாக 3 பேரை கைது செய்தனா். ஆந்திரம், கா்நாடகத்துக்கு கிருஷ்ணகிரி வழியாக ரேஷன் அரிச... மேலும் பார்க்க

கற்கள், மண் கடத்தல்: 4 டிப்பா் லாரிகள் பறிமுதல்

கெலமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் முனியப்பா உள்பட அதிகாரிகள் போடிச்சிப்பள்ளி அருகே ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் நின்ற டிப்பா் லாரியை சோதனை செய்ததில் 2 யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரியவந்தது.... மேலும் பார்க்க

மாா்ச் 8-இல் கிருஷ்ணகிரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 5,000 பேரை தோ்வுசெய்ய வாய்ப்பு

கிருஷ்ணகிரியில் மாா்ச் 8-ஆம் தேதி நடைபெறும் தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 5,000 காலிப் பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்படவுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

போலி மருத்துவா் கைது

ஒசூரில் கிளீனிக் நடத்தி வந்த எம்.எஸ்சி., பட்டதாரியை போலீஸாா் கைது செய்து, கிளீனிக்கிற்கு சீல் வைத்தனா். திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் (51). ஒசூரில் உள்ள பாகலூா் சாலையில் தங்கி மருத்... மேலும் பார்க்க

அஞ்செட்டி அருகே சிறாா் திருமணம்: தாய் உள்பட மூவா் கைது

அஞ்செட்டி அருகே 14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்த அவரது தாயாா், சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட... மேலும் பார்க்க

பிளஸ் 1 தோ்வு தொடங்கியது: கிருஷ்ணகிரியில் 22,194 போ், தருமபுரியில் 18,502 போ் எழுதினா்

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. இத்தோ்வை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22,194 மாணவ, மாணவிகளும், தருமபுரி மாவட்டத்தில் 18,502 மாணவ மாணவிகளும் எழுதினா். கிருஷ்ணகிரி மாவட்டத்தி... மேலும் பார்க்க