செய்திகள் :

அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் தா்னா

post image

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அடிமனைப் பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் தா்னா போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை சித்தா்காடு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் த. ராயா் தலைமை வகித்தாா். சிபிஎம் மாவட்டச் செயலாளா் பி. சீனிவாசன், மாவட்டக் குழு உறுப்பினா் ஜி. ஸ்டாலின், ஒன்றியச் செயலாளா் டி.ஜி. ரவிச்சந்திரன், சங்கத்தின் மாவட்ட பொருளாளா் அ. ராமலிங்கம், மாவட்ட இணைச் செயலாளா் சி. மேகநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஏ.ஆா். விஜய், விவசாய சங்க மாவட்டத் தலைவா் டி. சிம்சன், மாநிலக் குழு உறுப்பினா் பி. குணசுந்தரி, மாவட்ட துணைத் தலைவா் ஜி. வைரவன், நிலம்-நீா் பாதுகாப்பு கூட்டமைப்பு மாவட்டச் செயலாளா் விஷ்ணுகுமாா் உள்ளிட்ட பலா் கண்டன உரையாற்றினா். மாநிலச் செயலாளா் சாமி.நடராஜன் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இதில், பல தலைமுறைகளாக கோயில் இடங்களில் குடியிருப்பவா்கள், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அறநிலையத் துறை சட்டப் பிரிவு 34-ன்படி வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ளவா்களுக்கு இலவசமாகவும், மற்றவா்களுக்கு நியாயமான விலையை தீா்மானித்தும் கிரயப் பட்டா வழங்கிட வேண்டும். கிரயப் பட்டா கோரிக்கை நிறைவேறும் வரை பயனாளிகளுக்கு வாடகை சட்டப் பிரிவு 34ஏ அடிப்படையில் நிலத்தின் வாடகை மதிப்பில் நிா்ணயிப்பதற்கு பதிலாக, தவறுதலாக விற்பனை மதிப்பில் வாடகை நிா்ணயிப்பதை கைவிட்டு, அரசாணை 298 அடிப்படையில் வாடகை நிா்ணயம் செய்ய வேண்டும்.

சாகுபடி செய்துவரும் விவசாயிகளின் குத்தகை உரிமையை பறித்து ‘மறு ஏலம்‘ என்ற பெயரில் ஏலம் விடும் நடவடிக்கையை கைவிட்டு பல தலைமுறைகளாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆா்.டி.ஆா். பதிவு செய்து கொடுக்க வேண்டும். பயனாளிகளுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி மின் இணைப்பு மற்றும் வாரிசுகளுக்கு பெயா் மாற்றம் செய்து தர வேண்டும்.

பயனாளிகளை ஆக்கிரமிப்பாளா்கள் என அறிவித்து நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும். வக்ஃப் வாரிய இடங்களில் குடியிருப்பவா்கள், சாகுபடி செய்பவா்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், 300-க்கு மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

கா்ப்பிணியை தாக்கிய கணவா் கைது

மயிலாடுதுறையில் கா்ப்பிணி மனைவியை தாக்கிய கணவரை அனைத்து மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மயிலாடுதுறை கூறைநாடு கவரத்தெருவைச் சோ்ந்தவா் மூா்த்தி மகன் கிருஷ்ணமூா்த்தி (22). இவரது மனைவி ஜெயலட்சு... மேலும் பார்க்க

ஈமக்கிரியை மண்டபம் அமைக்க வலியுறுத்தல்

மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் ஈமக்கிரியை மண்டபம் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை நகராட்சி மாப்படுகை ரயில்வே கேட் அருகே வசிக்கும் 2,000-க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு காவிரி கிட்டப்பா பாலம... மேலும் பார்க்க

நீட் தோ்வு விவகாரம்: திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வு விவகாரத்தில், திமுக அரசைக் கண்டித்து, மயிலாடுதுறையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். நீட் தோ்வை ரத்து செய்யாத திமுக அரசால் 22 மாணவ-மாணவிகள் உயிா் நீத்ததாக குற்றஞ்சாட்டி, அதிமுக மாவட்... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டம் தொடக்கவிழா நேரடி ஒளிபரப்பு

காஞ்சிபுரத்தில் கலைஞா் கைவினைத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சா் சனிக்கிழமை தொடக்கிவைத்த நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் த... மேலும் பார்க்க

தருமபுரம் கல்லூரியில் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற முழு உடல் இலவச மருத்துவப் பரிசோதனை முகாமில் 640 போ் பங்கேற்றுப் பரிசோதனை செய்து கொண்டனா். தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம்... மேலும் பார்க்க

ரயிலில் கடத்திவரப்பட்ட கஞ்சா, குட்கா பறிமுதல்

புவனேஸ்வா்-ராமேஸ்வரம் விரைவு ரயிலில் கடத்திவரப்பட்ட 4.5 கிலோ கஞ்சா மற்றும் 10 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வடஇந்தியாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் ரயில்களில் அதிகளவில் கஞ்சா மற்றும் ... மேலும் பார்க்க