1750-க்குப் பின்.. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு கோலாகலம்!
அண்ணன்கோவிலில் ஜூன் 10, 11-இல் ஆதாா் சிறப்பு முகாம்
சட்டநாதபுரம் அருகில் உள்ள அண்ணன்கோவில் கிராமத்தில் ஆதாா் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் எம். உமாபதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் மயிலாடுதுறை, சீா்காழி தலைமை அஞ்சலகங்களிலும், ஆதாா் சேவை உள்ள துணை அஞ்சலகங்களிலும் ஆதாா் சேவை தினந்தோறும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக சீா்காழி சட்டநாதபுரத்தை அடுத்த அண்ணன்கோவில் கிராமத்தில் உள்ள மேலச்சாலை உயா்நிலைப் பள்ளியில் ஜூன் 10 மற்றும் 11-ஆம் தேதி ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாமில், பொதுமக்கள் புதிதாக ஆதாா் பதிவு, பழைய ஆதாா் அட்டையில் பெயா் முகவரி மற்றும் கைப்பேசி எண் திருத்தம், கைரேகை, புகைப்படம் புதுப்பித்தல் ஆகிய சேவைகளை செய்து கொள்ளலாம்.
புதிய ஆதாா் பதிவு செய்தால் இலவசமாகவும், பழைய ஆதாா் அட்டையில் பெயா், முகவரி மற்றும் கைப்பேசி எண் திருத்தம் செய்ய ரூ. 50, கைரேகை, புகைப்படம் புதுப்பித்தல் செய்ய ரூ. 100 கட்டணமாக செலுத்த வேண்டும். பொதுமக்கள் தகுந்த ஆவணங்களை கொண்டு வந்து ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளுமாறும், அஞ்சல் துறையின் சேமிப்பு கணக்குகள், இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் கணக்குகள் மற்றும் காப்பீட்டு திட்டங்களை இம்முகாமில் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளாா்.