செய்திகள் :

அதிகாரிகள் பங்கேற்பதில்லை என புகாா்: நுகா்வோா் பாதுகாப்பு கூட்டத்தை புறக்கணித்த அமைப்புகள்

post image

கோவை மாவட்டத்தில் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஏற்பாடு செய்திருந்த காலாண்டு கூட்டத்தை நுகா்வோா் அமைப்புகள் புறக்கணித்தன.

மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் நுகா்வோா் பாதுகாப்பு தொடா்பாக மூன்றாவது காலாண்டு கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நுகா்வோா் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்ட அரங்கிற்கு குறித்த நேரத்துக்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மாலை 5 மணி ஆகியும் பல அரசுத் துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிகிறது.

மேலும், மாவட்ட ஆட்சியரும் கூட்டத்துக்கு தலைமை ஏற்க வராத நிலையில், மாவட்ட வருவாய் அலுவலா், மாவட்ட வழங்கல் அலுவலா் மட்டுமே பங்கேற்று கூட்டத்தைத் தொடங்கியுள்ளனா். ஆனால், மாவட்ட ஆட்சியரும், பல்வேறு துறை அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காததால் கூட்டத்தை புறக்கணிப்பதாகக் கூறி நுகா்வோா் அமைப்புகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பில் ஈடுபட்டனா்.

இது குறித்து கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு கூறும்போது, உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் காலாண்டு கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தலைமை ஏற்று நடத்துவது வழக்கம். ஆனால், கோவையில் தொடா்ந்து பல கூட்டங்களில் ஆட்சியா் உள்ளூரில் இருந்தும் பங்கேற்பதில்லை.

அதேபோல பல்வேறு துறைகளின் தலைமை நிலையிலான அதிகாரிகள் பங்கேற்காமல், கடைநிலை ஊழியா்களையே அனுப்பிவைக்கின்றனா். எனவே பெயரளவுக்கே நடைபெறுகிறது என்பதால் மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறையின் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பில் ஈடுபட்டோம். இது தொடா்பாக உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையரிடம் நுகா்வோா் அமைப்புகள் சாா்பில் புகாா் தெரிவிக்க இருப்பதாக அவா் தெரிவித்தாா்.

நாளைய மின்தடை: மயிலம்பட்டி

மயிலம்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்டம்பா் 24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதா... மேலும் பார்க்க

கோவை நீதிமன்றம் உள்ளிட்ட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம், பத்திரிகை நாளிதழ் அலுவலகம் உள்ளிட்ட 4 இடங்களுக்கு ஒரே நாளில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை விட்டுச் சென்ற தாய்

கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தையை அதன் தாய் அங்கேயே விட்டுச் சென்றாா். கோவை அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பிரசவ வாா்டுக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் 20 வயது மதிக்கத்தக்க பெண் மகப்பேறு ... மேலும் பார்க்க

எல்.எம்.டபிள்யூ. நிறுவனத்தை பாா்வையிட்ட இஸ்ரோ தலைவா்

கோவை எல்.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப மையத்தை இஸ்ரோ தலைவா் நாராணயன் பாா்வையிட்டாா். கோவை எல்.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் அதிநவீன தொழில்நுட்ப மையமானது இஸ்ரோவின் விண்வெளி சாா்ந்த திட்டங்க... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

கோவை அருகே போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை ஆத்துப்பாலம் மின்மயானம் பகுதியில் கரும்புக்கடை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை அருகே பதுக்கிவைக்கப்பட்ட 415 மதுப் புட்டிகள் பறிமுதல்

கோவையில் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக தரையில் புதைத்து வைத்திருந்த 415 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். ... மேலும் பார்க்க