செய்திகள் :

அதிகாலையில் உக்ரைன் தலைநகர் மீது ரஷியா தாக்குதல்! 14 பேர் பலி!

post image

உக்ரைன் தலைநகரின் மீது ரஷியா, ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கீவ் நகரத்தின் மீது இன்று (ஜூன் 17) அதிகாலை முதல் ரஷியா ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 14 பேர் கொல்லப்பட்டதுடன், 44 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கீவ் நகரத்தின் ராணுவ நிர்வாகத் தலைவர் தைமுர் தகாசென்கோ கூறியதாவது:

“கீவ்விலுள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அடுக்குமாடி கட்டடங்கள் மீதான ரஷியாவின் தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கிய மக்களை மீட்கும் பணியில், மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஸெலன்ஸ்கி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நள்ளிரவு முதல் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் கீவ் நகரத்தின் ஏராளமான கட்டடங்கள் தகர்க்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, உக்ரைன் உள் துறை அமைச்சர் கூறுகையில், ரஷியாவின் தாக்குதல்களில் படுகாயமடைந்த அமெரிக்கர் ஒருவர் தற்போது பலியாகியுள்ளதாகவும், அடுக்குமாடி குடியிருப்பிலிருந்த 30-க்கும் மேற்பட்ட வீடுகள் தகர்க்கப்பட்டதாகவும், அவர் கூறியுள்ளார்.

இத்துடன், ஸ்விடோஷைன்ஸ்கி மற்றும் சோலோமியன்ஸ்கி ஆகிய மாவட்டங்களில், ரஷிய டிரோன்களை உக்ரைன் விமானப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதனால், உண்டான தீயினால் ஏராளமான மக்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த சௌதி இளவரசர் கண் விழித்தாரா? வைரலாகும் விடியோ

ரஷியாவுக்கு 6,000 ராணுவ பொறியாளர்களை அனுப்ப வட கொரியா திட்டம்!

ரஷியாவுக்கு உதவும் வகையில் 6 ஆயிரம் ராணுவ பொறியாளர்களை அனுப்ப வட கொரியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக அதிபர் கிம் ஜாங் உன்னிடம் பேச்சுவார்த்தை நடத்த ரஷியாவின் பாதுகாப்பு கவுன்... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் சண்டையால் பெட்ரோல் தட்டுப்பாடு வருமா?

மேற்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் சண்டையால், தற்போதைக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என்று மத்திய அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சர்வதேச சந்தையில், எரிபொருள் தேவைக்கு அதிகமாகவே இருப... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப் செயலியிலும் இனிமேல் விளம்பரங்கள் வரும்! பயனர்களுக்கு இம்சையாகுமா?

வாட்ஸ்ஆப் செயலியில் முதல்முறையாக விளம்பரங்கள் வரவுள்ளன. ஆனால், இந்த விளம்பரங்களால் வழக்கமான உரையாடல்களுக்கு இடையூறு ஏதும் இருக்காது. அந்த வகையில், விளம்பரங்களுக்கான பக்கம் வாட்ஸ்ஆப்பில் வடிவமைக்கப்பட்... மேலும் பார்க்க

சீனாவில் பட்டாசு ஆலை விபத்து! 9 பேர் பலி.. 26 பேர் படுகாயம்!

சீனாவின் மத்தியப் பகுதியிலுள்ள, பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட மிகப் பெரியளவிலான வெடி விபத்தால் 9 பேர் பலியாகியுள்ளனர். ஹுனான் மாகாணத்தின், லின்லி பகுதியிலுள்ள பட்டாசு உற்பத்தி ஆலையில், இன்று (ஜூன் ... மேலும் பார்க்க

ஜூலை 5ஆம் தேதி காத்திருக்கும் பேரழிவு? புதிய பாபா வங்கா கணிப்பு

2025ஆம் ஆண்டில் ஜூலை 5ஆம் தேதி உலகமே பேரழிவை சந்திக்கப்போவதாக புதிய பாபா வங்கி கணித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜப்பானின் ரையோ தத்சுகி என்பவர், தற்போது புதிய பாபா வங்கா என அறியப்படுகிறார். கல... மேலும் பார்க்க

எத்தியோப்பியா தலைநகர் - ஹைதராபாத் விமான சேவை துவக்கம்!

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபா மற்றும் தெலங்கானாவின் ஹைதரபாத் ஆகிய இருநகரங்களுக்கு இடையில் சர்வதேச விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. ஹைதரபாத்திலுள்ள ராஜிவ் காந்தி பன்னாட்டு விமான ... மேலும் பார்க்க