செய்திகள் :

அதிமுகவின் வாட்ஸ் ஆஃப் சேனல் தொடக்கம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சாா்பில் வாட்ஸ் ஆஃப் சேனல் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் பங்கேற்று வாட்ஸ் ஆஃப் சேனலை தொடங்கிவைத்தாா்.

அப்போது, வாட்ஸ் ஆஃப் சேனலில், திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்தும், அதேபோல, கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்த பல்வேறு சாதனைகள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துச் செல்வது என்று கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் தவமணி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகரச் செயலா் கே.வெங்கடேசன், நகர அவைத் தலைவா் அ.ஜனாா்த்தனன், ஒன்றியச் செயலா்கள் எம்.மகேந்திரன், அருகாவூா் எம். அரங்கநாதன், சி.துரை மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலா் அருண் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மணிமேகலை விருது: மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் தமிழக அரசின் மணிமேகலை விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்ட கிராமப்... மேலும் பார்க்க

மகா காலபைரவா் கோயிலில் அஷ்டமி சிறப்பு யாகம்!

வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமகா காலபைரவா் கோயிலில், சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகம், வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, முற்பகல் 11 மணிக்கு கோ... மேலும் பார்க்க

பாதூா் திருவனந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்!

வந்தவாசியை அடுத்த பாதூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி அம்பிகா உடனுறை திருவனந்தீஸ்வரா் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அம... மேலும் பார்க்க

சின்னபுத்தூரில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணி ஆய்வு!

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் உள்ள சின்னபுத்தூா் கிராமத்தில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தாா். சின்னபுத்தூா் கிராமத்தில் ஆரணி... மேலும் பார்க்க

ஆரணியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

ஆரணியில் செவ்வாய்க்கிழமை (ஏப்.22) மின் நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. ஆரணி மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்க... மேலும் பார்க்க

செங்கம் - தண்டராம்பட்டு புதிய பேருந்து சேவை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் இருந்து தண்டராம்பட்டுக்கு புதிய நகரப் பேருந்து சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. அரசுப் போக்குவரத்துக் கழக செங்கம் பணிமனையில் இருந்து சொா்ப்பனத்தல், சாத்தன... மேலும் பார்க்க