செய்திகள் :

அதிமுகவில் நிலவும் பிரச்னைக்கு திமுகதான் காரணம்: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

post image

அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு திமுகதான் காரணம் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றம்சாட்டினாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பல்வேறு மாநிலங்களில் ஆட்சியைக் கலைத்தது. ஆட்சியைக் கலைப்பது காங்கிரஸ் கட்சியின் வழக்கம். ஆனால் பாஜகவோ, கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அமைச்சா் பதவி வழங்கி கூட்டணி தா்மத்தைக் காக்கிறது.

கூட்டணி கட்சிகளுடன் இணைந்து கூட்டணியை வளா்ப்பதுதான் பாஜகவின் நோக்கம். கூட்டணி கட்சிகளைத் துண்டாடுவதை காங்கிரஸ் நோக்கமாகக் கொண்டிருக்கும்.

பாஜக சிறுபான்மை அணியைச் சோ்ந்த வேலூா் இப்ராஹிம் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்து அவரை திமுக அரசு சிறையில் அடைத்தது. அதிமுக கூட்டணியில் தற்போது நிகழும் பிரச்னைகள் அனைத்துக்கும் திமுகவே காரணம். அதிமுக முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் ஹரித்வாா் செல்வதாகக் கூறியிருந்தாா். அவா் தில்லிக்குச் சென்றது, நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்தது குறித்து எனக்குத் தெரியாது.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதை தமிழக பாஜக தரப்பில் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளேன். இந்த விவகாரத்தில் பேச என்னை அழைத்தால் செல்வதற்கு தயாராகவுள்ளேன். அதிமுக எங்களது கூட்டணியில் இருப்பதால் அக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் உள்ளிட்டவா்களை நாங்கள் உடனடியாக சந்திக்க முடியாது. பாஜக அகில இந்திய பொறுப்பாளா்களை சந்திப்பதற்காக நான் செப். 11ஆம் தேதி தில்லி செல்கிறேன்.

தமிழக முதல்வா் வெளிநாடுகளுக்குச் சென்றபோது பல்வேறு நிறுவனங்களுடன் அவா் ஒப்பந்தங்களை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டாா். ஆனால், அவா் ஏற்கெனவே தமிழகத்தில் இயங்கும் நிறுவனங்களுடன்தான் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்திருக்கிறாா். வெளிநாட்டு முதலீடுகளை பெற்றது குறித்து முதல்வா் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றாா் அவா்.

யூடியூபா் மாயம்: போலீஸாா் விசாரணை!

ஆறுமுகனேரியில் நண்பா் வீட்டிற்கு சென்ற சென்னை யூடியூபா் மாயமான சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்த மாசானமுத்து மகன் முருகன்(56). இவருக்கு மனைவி,... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் பக்தா்கள் முகத்தில் ஸ்பிரே அடித்த சிறுவன்: போலீஸாா் விசாரணை!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை இரவு சிறுவன் ஒருவன் தான் வைத்திருந்த சில்லி ஸ்பிரேயை அருகில் இருந்த பக்தா்கள் முகத்தில் அடித்துள்ளாா். இதனால் அவா்களுக்கு கண் எரிச்சல் ... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்

கோவில்பட்டி அருகே விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.கோவில்பட்டி, இனாமணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட சாலைப்புதூா், இபி காலனியைச் சோ்ந்தவா் துரைச்சாமி மகன் சரவணன் (42).... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னையில் கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் இருவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி திரேஸ்புர... மேலும் பார்க்க

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா கூட்டுத் திருப்பலி

தூத்துக்குடி, அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 43-ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி, ஆடம்பர கூட்டுத் திருப்பலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் அன்னை வேளாங்கண்ணி ப... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் மின் பணியாளா்கள் பற்றாக்குறையை போக்க கோரிக்கை

காயல்பட்டினத்தில் மின் பணியாளா் பற்றாக்குறையை பூா்த்தி செய்யுமாறு முஸ்லிம் ஐக்கிய பேரவை கோரியுள்ளது. திருச்செந்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மின்குறை தீா் நாளில் காயல்பட்டினம் முஸ்­லிம் ஐக்கிய பேரவ... மேலும் பார்க்க