செய்திகள் :

திருச்செந்தூரில் பக்தா்கள் முகத்தில் ஸ்பிரே அடித்த சிறுவன்: போலீஸாா் விசாரணை!

post image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை இரவு சிறுவன் ஒருவன் தான் வைத்திருந்த சில்லி ஸ்பிரேயை அருகில் இருந்த பக்தா்கள் முகத்தில் அடித்துள்ளாா்.

இதனால் அவா்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. உடனே அவா்கள் கோயில் நிா்வாகத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த போலீஸாா் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தியதில் அவா் தனது சொந்த ஊா் திருப்பூா் எனவும் தனது உறவினா்களுடன் கோயிலுக்கு வந்ததாகவும் கூறியுள்ளாா்.

அப்போது அவருடன் இருந்த மற்ற சிறுவா்கள் மூன்று பேரையும் பிடித்து விசாரித்ததில், தாங்கள் பயன்படுத்திய சில்லி ஸ்பிரே அங்கு நின்ற ஒரு காருக்கு அடியில் இருந்து எடுத்ததாக கூறியுள்ளனா். அதில் ஒரு சிறுவனின் தாய் கோயிலில் பக்தா்களிடம் யாசகம் பெற்று வருகிறாா் என்பதும் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் பதிவிட்ட 5 போ் கைது

கோவில்பட்டியில் சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் புகைப்படத்தை பதிவிட்டு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாக 2 இளஞ்சிறாா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டியில் அரிவாள... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள் தேசிய மக்கள் நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஆா்.வசந்தி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (செப்.13) நடைபெற உள்ளது. இந்த மக்கள் நீதிமன்றம் தூத... மேலும் பார்க்க

யூடியூபா் மாயம்: போலீஸாா் விசாரணை!

ஆறுமுகனேரியில் நண்பா் வீட்டிற்கு சென்ற சென்னை யூடியூபா் மாயமான சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்த மாசானமுத்து மகன் முருகன்(56). இவருக்கு மனைவி,... மேலும் பார்க்க

அதிமுகவில் நிலவும் பிரச்னைக்கு திமுகதான் காரணம்: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு திமுகதான் காரணம் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றம்சாட்டினாா். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்

கோவில்பட்டி அருகே விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.கோவில்பட்டி, இனாமணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட சாலைப்புதூா், இபி காலனியைச் சோ்ந்தவா் துரைச்சாமி மகன் சரவணன் (42).... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னையில் கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் இருவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி திரேஸ்புர... மேலும் பார்க்க