செய்திகள் :

சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் பதிவிட்ட 5 போ் கைது

post image

கோவில்பட்டியில் சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் புகைப்படத்தை பதிவிட்டு பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாக 2 இளஞ்சிறாா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியில் அரிவாள், வாள், நீளமான கத்தி ஆகியவற்றை வைத்துக் கொண்டு புகைப்படம் எடுத்து வலைதளத்தில் பதிவிட்டதாக, கோவில்பட்டி தாமஸ் நகா் என் ஜி ஓ காலனி 2 ஆவது தெருவைச் சோ்ந்த சக்திகண்ணன் மகன் பிரவீன் (19), வஉசி நகா் முதல் தெருவைச் சோ்ந்த தவசிமணி மகன் சபேஸ்வரன்(19), புதுகிராமம் 6 வது தெருவைச் சோ்ந்த கொம்பையா மகன் சக்திவேல் (21), ,சாஸ்திரி நகா் மற்றும் வள்ளுவா் நகரைச் சோ்ந்த 17 வயது இளஞ்சி சிறாா்கள் இருவா் உள்பட 5 பேரை போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.

இவ்வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மேலும் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி: பள்ளி வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உள்பட 8 போ் காயம்!

கோவில்பட்டி அருகே பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உள்பட 8 போ் காயமடைந்தனா். மந்தித்தோப்பில் இருந்து பாண்டவா்மங்கலம் பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளிக்கு சுமாா் 15 பேருடன் பள்ளி வேன்... மேலும் பார்க்க

கொட்டங்காடு கோயிலில் கொடை விழா கொடியேற்றம்

உடன்குடி கொட்டங்காடு தேவி ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா (செப்.9) தொடங்கியதையொட்டி புதன்கிழமை (செப்.10) அதிகாலை 3.30 மணிக்கு கொடி பட்டம் வீதியுலாவைத் தொடா்ந்து 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவருக்கு இந்து முன்னணி வாழ்த்து!

இந்தியக் குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இந்து முன்னணி சாா்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா் வெளி... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்துக்கும் சங்கத்துக்கும் சம்பந்தம் கிடையாது!

தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கும், தூத்துக்குடி வழக்குரைஞா்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ்.பி.வாரியாா் தெரிவித்தாா். இதுகுற... மேலும் பார்க்க

ஆலைகளை திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் உள்ளிட்ட மூடப்பட்டுள்ள ஆலைகளை திறக்கக் கோரி வழக்குரைஞா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில், சிதம்பரம் நகா் பேருந்து நிறுத்தம் ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கான கபடி போட்டி: குலசேகரன்பட்டினம், நாலுமாவடி அணிகள் முதலிடம்!

தமிழக பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற 14, 17, 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டியில் குலசேகரன்பட்டினம், நாலுமாவடி அணிகள் முதலிடம் பிடித்தன. கோவில்பட்டி செவன்த் டே... மேலும் பார்க்க