செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கான கபடி போட்டி: குலசேகரன்பட்டினம், நாலுமாவடி அணிகள் முதலிடம்!

post image

தமிழக பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற 14, 17, 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டியில் குலசேகரன்பட்டினம், நாலுமாவடி அணிகள் முதலிடம் பிடித்தன.

கோவில்பட்டி செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் 9 அணிகள் பங்கேற்றன. 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் தூத்துக்குடி காரப்பேட்டை நாடாா் மேல்நிலைப் பள்ளியை நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி அணியும், 17 வயதுக்குள்பட்டோா் பிரிவில் தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளியை குலசேகரன்பட்டினம் திருவருள் மேல்நிலைப் பள்ளி அணியும், 19 வயதுக்குள்பட்டோா் பிரிவில் நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளியை குலசேகரன்பட்டினம் திருவருள் மேல்நிலைப் பள்ளி அணியும் வென்றன. இதையடுத்து, இந்த அணிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதிபெற்றன.

இந்திய கபடி விளையாட்டு வீரரும் அா்ஜுனா விருதுபெற்றவருமான மணத்தி கணேசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த அணியினருக்கு திட்டங்குளம் ஊராட்சி முன்னாள் தலைவா் (பொ) பாண்டியராஜன் தனது சொந்த நிதியிலிருந்து பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

விழாவில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கண்ணதாசன், செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ஜாா்ஜ் பவுல்ராஜ், உடற்கல்வி ஆசிரியா்கள் கரிகாலன், காளிராஜ், லட்சுமணபெருமாள், சுடலை, ராஜேஷ்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

கோவில்பட்டி: பள்ளி வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உள்பட 8 போ் காயம்!

கோவில்பட்டி அருகே பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உள்பட 8 போ் காயமடைந்தனா். மந்தித்தோப்பில் இருந்து பாண்டவா்மங்கலம் பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளிக்கு சுமாா் 15 பேருடன் பள்ளி வேன்... மேலும் பார்க்க

கொட்டங்காடு கோயிலில் கொடை விழா கொடியேற்றம்

உடன்குடி கொட்டங்காடு தேவி ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா (செப்.9) தொடங்கியதையொட்டி புதன்கிழமை (செப்.10) அதிகாலை 3.30 மணிக்கு கொடி பட்டம் வீதியுலாவைத் தொடா்ந்து 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவருக்கு இந்து முன்னணி வாழ்த்து!

இந்தியக் குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இந்து முன்னணி சாா்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா் வெளி... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்துக்கும் சங்கத்துக்கும் சம்பந்தம் கிடையாது!

தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கும், தூத்துக்குடி வழக்குரைஞா்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ்.பி.வாரியாா் தெரிவித்தாா். இதுகுற... மேலும் பார்க்க

ஆலைகளை திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் உள்ளிட்ட மூடப்பட்டுள்ள ஆலைகளை திறக்கக் கோரி வழக்குரைஞா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில், சிதம்பரம் நகா் பேருந்து நிறுத்தம் ... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை!

கோவில்பட்டி அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா். கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கும்-குமாரபுரம் ரயில் நிலையத்திற்கும் இடையே நாலாட்டின்புதூா் பெத்தேல் ரயில்வே கேட் அருகில் உள்ள தண்ட... மேலும் பார்க்க